Friday, October 16, 2009

ஐ! தீபாவ‌ளி!


தீபாவ‌ளி வெள்ளிக்கிழ‌மைங்க‌றாங்க‌, இல்ல‌ல்ல‌ ச‌னிக்கிழ‌மைதாங்க‌றாங‌க‌. அட‌ இதுக்கு கூட‌ நீயா நானான்னு வ‌ந்து கோபிதான் க‌ருத்து சொல்ல‌ணுமா? வெள்ளிக்கிழ‌மை தீபாவ‌ளி, அத‌னால‌ ஆஃபிஸ் மூணு நாள் லீவு. ஸோ, ஆஃபிஸ‌ பொருத்த‌வ‌ரைக்கும் நாம‌ வெள்ளிக்கிழ‌மைதான் தீபாவ‌ளி கொண்டாடுறோம்.

அம்மாவை‌ கேட்டா ந‌மக்கு ச‌னிக்கிழ‌மைதான்டா தீபாவ‌ளிங்க‌றாங்க‌. ஸோ, வீட்ல‌ ச‌னிக்கிழ‌மைதான் தீபாவ‌ளி கொண்டாடுறோம். ஏதோ ஒண்ணு ந‌மக்கு லீவு வ‌ருதா, அதுதான் முக்கிய‌ம். என்ன‌தான் செவ‌ன் டாங்கீஸ் வ‌ய‌சு ஆனாலும், லீவுன்னு வ‌ந்தா ம‌ட்டும் ம‌னசு எல்கேஜி பைய‌ன் மாதிரிதான் இருக்குது.
இந்த‌ மாதிரி ப‌ண்டிகை டைம்ல‌ ப‌ஸ்ஸ‌ புடிச்சு நிம்ம‌தியா விண்டோ சீட்ல‌ உக்காந்துகிட்டு ஊருக்கு போனா, உண்மையாவே அது "இண்டியானா ஜோன்ஸ்" ரேஞ்சுக்கு ஒரு அட்வென்ச்ச‌ர்தான்.

பொங்க‌ல் அன்னைக்கு ஊருக்கு போன‌து பெரும் பாடு. மொத‌ல்ல‌ வேள‌ச்சேரில‌ இருந்து ஒரு ப‌ஸ்ஸ‌ புடிச்சு, கோய‌ம்பேடுக்கு போற‌துக்குள்ள‌, வ‌ழியில‌ செம‌ டிராஃபிக். இத்த‌னைக்கும் காலைல‌ 6:30 ம‌ணிக்கே. கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா ந‌க‌ர்ந்துகிட்டு இருந்த‌ வ‌ண்டி, கோய‌ம்பேடு கிட்ட‌ போகும்போது, என‌க்கு டைய‌ர்டா இருக்குன்னு சொல்லி அந்த‌ டிராஃபிக்க‌ கார‌ண‌ம் காட்டி நின்னுடுச்சு.

ச‌ரி, சிஎம்பிடிக்கு ந‌ட‌ந்தே போய், உள்ள‌ ப‌ஸ்ஸ‌ பாத்தா, ய‌ப்பா....எவ்வ்வ்வ்வ‌ளோ பேர்...அதுக்க‌ப்புற‌ம் ஸ்டாண்டிங்ல‌ போற‌ மாதிரிதான் ஒரு ப‌ஸ் கிடைச்சுது. மேல‌ கிடைக்குற‌ க‌ம்பிய‌ புடிக்கவே வேணாம், இந்த‌ ப‌க்க‌ம் ஒருத்த‌ர் நெருக்குறார், அந்த‌ ப‌க்க‌ம் ஒருத்த‌ர் நெருக்குறார். இந்த‌ மாதிரி கூட்ட‌த்துல‌ அது வ‌ரைக்கும் நான் போன‌தேயில்ல‌. இத‌ ப‌த்தி அப்புற‌ம் ஒரு ப‌திவ‌ (மொக்கைய‌???) போடுறேன்.

ப‌க‌வானே, இன்னைக்கு என்னை அந்த‌ மாதிரி க‌ஷ்ட‌ப்ப‌டுத்தாம‌ இருந்தா, இந்த‌ ச‌ண்டே அன்னைக்கு நான் ஆஃபிஸ்ல‌ ஸிக் லீவ் எடுக்க‌மாட்டேன்...இது ச‌த்திய‌ம்..ச‌த்திய‌ம்...ச‌த்திய‌ம்.
ந‌ண்ப‌ர்க‌ளுக்கும், அனைத்து ப‌திவ‌ர்களுக்கும் என‌து இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக‌ள்!

1 comment:

  1. . இத‌ ப‌த்தி அப்புற‌ம் ஒரு ப‌திவ‌ போடுறேன்.
    epooooooooooooo

    ReplyDelete