Saturday, December 31, 2011

2011ல் ரசித்து பார்த்த படங்கள்

எங்கேயும் எப்போதும் 

தமிழ் இயக்குனர்களின் முதல் படத்தின் முதல் காட்சியை யோசித்து பாருங்கள். பெரும்பாலும் அது ஒரு பாஸிட்டிவ் செண்டிமென்ட்டையே பிரதிபலிக்கும். இந்த விஷயத்தில் இயக்குனர் சரவணனை பாராட்டியே ஆகவேண்டும். முதல் காட்சியே விபத்து. பலர் இறந்து போகிறார்கள். இதுதான் க்ளைமேக்ஸும் கூட‌. 

முதலிலேயே க்ளைமேக்ஸை காட்டிவிட்டால் பின்பு படத்தில் என்ன ஆர்வம் இருக்கும் என்று எண்ணியவர்களுக்கு நிறைய ஆச்சரியங்களை வைத்திருந்தார். தினந்தோறும் செய்தித்தாள் வாசிக்கும்போது எங்கேனும் விபத்து குறித்த செய்திகள் இருந்தால் இந்த படம் நினைவுக்கு வருவதை இன்னும் தவிர்க்க முடியவில்லை.  


ஜெய்-அஞ்சலி மற்றும் ஷ்ராவனந்த்-அனன்யா ஆகியோரின் காதல் காட்சிகள் படு யதார்த்தம். பொதுவாக பெண்களுக்கு முன், நான் நல்லவன் என்று காட்டிகொள்ளும் கேரக்டர்கள் மத்தியில், அனன்யாவிடமே தம்மடிக்க சில்லறை கேட்கும் ஷ்ராவனந்த் கேரக்டர் ரசிக்கும்படி இருந்தது. 

அஞ்சலி - போல்டான பெண்ணுக்குண்டான பாடி லாங்க்வேஜ், குரல் எல்லாமே சிறப்பாக அமைந்திருந்தது. குறிப்பாக ஜெய்யை டாமினேட் செய்யும் காட்சிகள்,  காதலன் இறந்துகிடக்கும்போது உடல் உறுப்பு தானம் பற்றி டாக்டரிடம் அழுதுகொண்டே சொல்லும் காட்சி.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்போதெல்லாம் அனுஷ்காவிற்கு பிறகு அஞ்சலியைத்தான் கவனிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

ஆடுகளம் 

ஈகோவை நேட்டிவிட்டியுடன் அழகாக கட்டிய படம். ஹீரோயிசத்திற்கான வாய்ப்புகள் இருந்தும் அதை தவிர்த்ததினாலேயே தனுஷை ரொம்பவும் பிடித்துப்போனது. செல்வராகவனால் மட்டுமே தனுஷிடமிருந்து சிறப்பான நடிப்பை வெளிக்கொணர முடியும் என்று நம்பியிருந்த எனக்கு, நானும் ஆட்டத்துல இருக்கேன் என்று வெற்றிமாறன் புரியவைத்தார். 

சேவல் சண்டையில் முதல் முறை வெற்றி பெறும் காட்சியில் தனுஷின் நடிப்பை பார்த்து அசந்துபோய்விட்டேன்.  ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளேயும் தோல்வியை தாங்க முடியாத ஒரு ஈகோ பிடித்தவன் இருக்கிறான் என்பதை உணரவைத்த படம். 

மங்காத்தா

அந்த படத்திலிருந்து சுட்டது, இந்த படத்திலிருந்து சுட்டது என குறை கூற ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அஜித்தின் ஸ்க்ரீன் ப்ரெச‌ன்ஸிற்காகவே ரசித்து ரசித்து பார்த்த படம். ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. அஜித்தின் 50௦வது படத்தை கெளதம் இயக்குவதாக இருந்தது. ஒரு சில காரணங்களால் அது நடக்காததால் கெளதம் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார், "நாலு பசங்க ஹீரோவா நடிக்கறாங்க, அவங்களோட இவரும் நடிக்கறார்". இதற்கு அஜித் எந்த பதிலும் சொல்லவில்லை.  மங்காத்தாவில் நடித்தார்.  அவ்வளவே.

இதற்கு முன் மேக்கிங்கிற்காக பில்லா பிடித்திருந்தது.  அதற்கு முன் வந்த சில படங்களில் அஜித் செய்யும் பில்டப்பை வெகுவாக கிண்டல் செய்திருக்கிறேன்.  ஆனால் இந்த படத்தில் அஜித்தை முழுக்க முழுக்க ரசித்து பார்த்தேன். அந்த இன்டர்வெல் சீன்....என்ன மாதிரியான மாஸ்! 

"இப்போ ஹீரோ என்ட்ரி, அதாவது என் என்ட்ரி. த கிங்.....த கிங்மேக்கர்!" என்று கர்ஜிக்கும்போதும் சரி, பணத்தை இழந்த பின் வைபவ்விடம் "பயமா இருக்குல்ல, உனக்கெல்லாம் ஐநூறு கோடி வந்தா என்ன போனா என்ன? ஆனா எனக்கு வேணும், ஐ'ம் எ கிங்மேக்கர்டா" என்று ஆவேசப்படும்போதும் சரி....தல தலதான்! 


சில காட்சிகளில் வரும் அநாகரிகமான வார்த்தைகளை மட்டும் தவிர்த்திருக்கலாம். வெறும் உதட்டசைவாக இருந்தாலும் எளிதாக கண்டுபிடிக்கமுடிந்தது.

EXAM

உணர்வுபூர்வமாக பல படங்களை பார்த்திருக்கிறோம். இது முழுக்க முழுக்க அறிவுபூர்வமான படம்.  படம் பார்ப்பவர்களின் இன்டெலிஜென்ஸுக்கு கண்டிப்பாக இந்த படம் ஒரு சவால்தான்.

ஒரு நிறுவனத்தில் சிஇஓவின் பிஏ பணிக்கான கடைசி கட்ட தேர்வு. எட்டு பேர் போட்டியாளர்கள். அதில் ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார். எட்டு பேரும் ஒரு அறையில் அமரவைக்கப்படுகின்றனர். தேர்விற்கான நேரம் மொத்தம் 80௦ நிமிடங்கள்.  தேர்வு அறையினுள் வரும் அந்த அலுவலகத்தை சேர்ந்த ஒருவர் இந்த தேர்வின் விதிமுறைகளை சொல்கிறார்.

1. அவரிடமோ அல்லது அங்கு நிற்கும் செக்யூரிட்டியிட‌மோ யாரும் பேசக்கூடாது
2. விடைத்தாளுக்கு எந்த சேதமும் ஏற்படக்கூடாது
3. எந்த காரணத்திற்காகவும் தேர்வு நேரம் முடியும் முன் யாரும் வெளியே போகக்கூடாது

இந்த விதிகளை மீறுபவர்கள் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்படுவர். இவற்றை எல்லாம் சொல்லிவிட்டு அவர் சென்றுவிட, போட்டியாளர்கள் தேர்வுக்கு தயாராகின்றனர். தாளை திறந்தவுடன் அவர்களுக்கு அதிர்ச்சி. அதில் கேள்வியே இல்லை. கேள்வியே இல்லாமல் என்ன பதில் எழுதுவது?........இதற்கு மேல், கேள்வி என்ன‌, யார் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


ROCKSTAR

டெல்லியில் இருக்கும் ஒரு சாதாரண இளைஞன் எப்படி ஒரு ராக்ஸ்டாராக மாறுகிறான் என்பதே கதை. மனதில் வலி இருந்தால்தான் பெரிய அளவில் சாதிக்க முடியும் என்று ஒருவர் கூற, அதற்கு காதல்தான் சரியான வழி என முடிவு செய்து நர்கிஸ் உடன் பழக ஆரம்பிக்கிறார் ரன்பீர். பழகிய சில நாட்களில் நர்கிஸ் திருமணமாகி Pragueக்கு சென்றுவிட, அதன்பின் அவரை மறக்க முடியாமல் தவித்தாலும், இசையில் கொஞ்சம் கொஞ்சமாக ரன்பீருக்கு புகழ் கிடைக்க ஆரம்பிக்கிறது.

Pragueல் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு ரன்பீருக்கு கிடைக்க, அதை பயன்படுத்தி நர்கிஸை மீண்டும் சந்திக்கிறார். அதன் பின் அவர்கள் வாழ்கையில் பல மாற்றங்கள். அதையெல்லாம் படம் பா.தெ.கொ.

இரண்டாம் பாதியில் கொஞ்சம் திரைக்கதையில் தொய்வு ஏற்படுவது போன்று தோன்றினாலும் ரன்பீர் கபூரின் நடிப்பு அதையெல்லாம் தாண்டி மனதில் நின்றது படத்திற்கு பெரிய ப்ளஸ். எனக்கென்னமோ இது ரன்பீர் கபூரை மனதில் வைத்தே எழுதப்பட்ட கதை என்று தோன்றியது.

ஏ.ஆர்.ரஹ்மான். இந்த பெயர் மட்டும்தான் இந்த படத்தை பார்ப்பதற்கு முக்கிய காரணம்.  என்ன ஒரு இசை! படத்தில் இசையின் முக்கியத்துவத்தை உணர்ந்து மோஹித் செளகான் ஒவ்வொரு பாடலையும் அசத்தலாக பாடியிருக்கிறார். அடுத்த வருடம் இந்த படம் இசை சம்பந்தப்பட்ட நிறைய விருதுகளை அள்ளப்போவது மட்டும் உறுதி.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Tuesday, November 29, 2011

த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ருக்கு கோடானு கோடி ந‌ன்றிக‌ள்!

சிம்பு, ப‌ர‌த், விஷால் ந‌டித்த‌ ப‌ட‌ங்க‌ளைப் பார்ப்ப‌தைவிட‌ இப்போதைக்கு வீட்டிலிருந்து அலுவ‌ல‌க‌ம் சென்று வ‌ருவ‌துதான் மிகுந்த‌ எரிச்ச‌லைத் த‌ருகிற‌து. ந‌ம்மிடையே ம‌ழை நீர் வ‌டிகால் வ‌சதி எந்த‌ ல‌ட்ச‌ண‌த்தில் இருக்கிற‌து என்ப‌து ஒவ்வொரு முறை ம‌ழை பெய்யும்போதும் தெளிவாக‌த் தெரிகிற‌து.

வீட்டின் அருகிலேயே பெருங்குடி ஏரி இருக்கிற‌து. அதை ஏரி என்று கூட‌ சொல்ல‌முடியாது. அந்த‌ இட‌ம் அண்ணா ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்திற்கு சொந்த‌மான‌ இட‌ம். அதை ர‌யில்வே குவார்ட்ட‌ர்ஸாக‌ மாற்ற‌ப்போகிறார்க‌ள் என்றும் ஒரு பேச்சு இருந்த‌து. ஆனால் த‌ற்போதைக்கு அந்த‌ இட‌த்தைப் பார்த்தால் அது ஒரு ஏரி போல‌த்தான் காட்சிய‌ளிக்கிற‌து.

இவ்வ‌ருட‌ ஆர‌ம்ப‌த்தில் நாங்க‌ள் குடியிருக்கும் தெரு ம‌ற்றும் அக்க‌ம் ப‌க்க‌ம் இருக்கும் தெருக்க‌ளிலெல்லாம் சிமெண்ட் ரோடு போட்டார்க‌ள். எந்த‌ அழ‌கில் ரோடு போட்டிருக்கிறார்க‌ள் என்று இப்போதுதான் உறைக்கிற‌து. பெய்த‌ ம‌ழைக்கு, ரோட்டில் தேங்கும் த‌ண்ணீரெல்லாம் ஏரிக்கு போகாம‌ல், ஏரி நிறைந்து தெருவுக்குள் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கிற‌து. மிகைப்ப‌டுத்திச் சொல்ல‌வில்லை, வீட்டிற்கு வெளியே தேங்கும் த‌ண்ணீரில் ந‌ட‌ந்து போனால், நிறைய‌ மீன்க‌ளையெல்லாம் காண‌முடிகிற‌து. 

டாஸ்மாக்குக்கு போகாம‌லேயே த‌ண்ணீரில் மித‌க்கும் எங்க‌ள் தெரு





இர‌ண்டு வார‌ங்க‌ளுக்கு முன் பெய்த‌ ம‌ழையின்போதே, தெருவில் த‌ண்ணீர் அதிக‌மாக‌ தேங்கியிருந்த‌து. ஃபேஸ்புக்கில் மேய‌ரின் ப்ரொஃபைலில் அவ‌ருடைய‌ தொலைபேசி எண் இருந்த‌து. கால் ப‌ண்ணிய‌போது எதிர்முனையில் ஒருவ‌ர் பேசினார். அவ‌ரின் பிஏவாக‌ இருக்க‌க்கூடும். எந்த‌ ஏரியா, தெரு என்ப‌தையெல்லாம் கேட்டுக்கொண்ட‌பிற‌கு, என் பெய‌ரையும், ந‌ம்ப‌ரையும் கேட்டு வாங்கிக்கொண்டார்.

உங்க‌ள் தெருவில் ந‌ட‌வ‌டிக்கை எடுக்கும்போது, உங்க‌ளுக்குத் த‌க‌வ‌ல் தெரிவிக்க‌ப்ப‌டும் என்றார். இர‌ண்டு வார‌ங்க‌ள் க‌ட‌ந்து இப்போது ம‌றுப‌டியும் ம‌ழை பெய்து அவ‌ஸ்தையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்னும் கால் வ‌ந்த‌பாடில்லை.



இத்த‌னைக்கும் அடை ம‌ழை பெய்த‌து, பேய் ம‌ழை கொட்டித் தீர்த்த‌து என்றெல்லாம் சொல்லிவிட‌ முடியாது. எவ்வ‌ள‌வு பெய்ய‌ வேண்டுமோ அந்த‌ள‌வு ஒவ்வொரு வ‌ருட‌மும் பெய்துகொண்டுதான் இருக்கிற‌து. இந்த‌ ஆண்டும் விதிவில‌க்க‌ல்ல‌. இந்த‌ள‌வு ம‌ழை இப்போது இல்லையென்றால் நாம்தான் ஏப்ர‌ல், மே மாத‌ங்க‌ளில் த‌ண்ணீருக்காக‌ க‌ஷ்ட‌ப்ப‌ட‌வேண்டியிருக்கும்.

குறை ந‌ம் சாலை வ‌ச‌திக‌ளில்தான் இருக்கிற‌து. எவ‌ரெல்லாம் இந்த‌ சாலை போடும் கான்ட்ராக்ட்டில் ல‌ஞ்ச‌ம் வாங்குகிறார்க‌ளோ, அவ‌ர்க‌ளுக்கு ஒரு வேண்டுகோள். த‌ய‌வுசெய்து கொஞ்ச‌ம் குறைத்து வாங்குங்க‌ள். ஈசிஆர் அள‌வுக்கு தேவையில்லை. இர‌ண்டு ம‌ணி நேர‌ ம‌ழைக்கே பிள‌ந்து கொள்ளும் சாலைக‌ளை வைத்துக்கொண்டு என்ன‌ ம‌......வாயில் கெட்ட‌ வார்த்தைதான் வ‌ருகிற‌து.

இவ்வ‌ள‌வு ம‌ழைக்கு அப்புற‌மும் ஒரு துரும்பையும் கிள்ளிப்போடாம‌ல், ம‌க்க‌ளின் ச‌கிப்புத்த‌ன்மையை அதிக‌ரித்து எதையும் தாங்கும் வ‌லிமையை ம‌றைமுக‌மாக‌ வ‌ள‌ர்க்கும், தாயுள்ள‌ம் கொண்ட‌ த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ருக்கு கோடானு கோடி ந‌ன்றிக‌ள்!

Tuesday, November 15, 2011

ந‌ன்றி ம‌ற‌ப்ப‌து ந‌ன்ற‌ன்று


ஏழாம் அறிவு - முருக‌தாஸ் & சூர்யா. இந்த‌ காம்பினேஷ‌னுக்காக‌வும்,  ஆடியோ ரிலீஸின்போது கொடுத்த‌ ஹைப்'பையும் எதிர்பார்த்து, ஆசை ஆசையாக‌ ப‌ட‌ம் பார்க்க‌ப்போனால், நொந்துபோன‌துதான் மிச்ச‌ம். க‌ண்டிப்பாக‌ இது ஒரு வித்தியாச‌மான‌ க‌தைக்க‌ள‌ன். இதில் இருவேறு க‌ருத்துக‌ள் இல்லை. ஆனால் திரைக்க‌தை? செம‌ சொத‌ப்ப‌ல். முத‌ல் பாதியில் வ‌ரும் காட்சிக‌ள் பெரும‌ள‌வு ஈர்க்காத‌து திரைக்க‌தையின் ப‌ல‌வீன‌ம். ஹீரோவும் ஹீரோயினும் காத‌லித்தே ஆக‌வேண்டும் என்ற‌ க‌ட்டாய‌ விதியை த‌ய‌வுசெய்து மாத்துங்க‌ப்பா!

க‌தைக்கு ச‌ம்பந்த‌மே இல்லாம‌ல் வ‌ரும் காமெடி ட்ராக், குத்துப்பாட்டு, லூசு ஹீரோயின், லூசாக‌ இருந்தாலும் அவ‌ளையே காத‌லிக்கும் ஹீரோ..இது போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ள் இல்லாம‌ல் க‌ள‌மிற‌ங்கிய‌து ம‌ட்டுமே ஆறுதலாக‌ இருந்த‌து. ர‌ஜினி, க‌ம‌லுக்குப் பிற‌கு சூர்யாவின் திற‌மையை விய‌ந்து ர‌சிக்கிறேன். ப‌ட், வாட் டு டூ? பெட்ட‌ர் ல‌க் ஃபார் 'மாற்றான்' சூர்யா.

****************

இந்த‌ வ‌ருட‌ க‌டைசியில் பார்க்க‌வேண்டிய‌ ப‌ட‌ங்க‌ளின் லிஸ்ட் நீண்டுகொண்டே போகிற‌து. 

Ra.One,  The Adventures of Tintin,  Rockstar,  Don 2 & Mission Impossible 4. ஷாரூக்கிற்காக‌ ரா.ஒன்னை ரொம்ப‌வும் எதிர்பார்த்தேன். பார்க்கிற‌வ‌ர்க‌ளெல்லாம் நெக‌ட்டிவ்வாக‌வே சொல்லிக்கொண்டிருப்ப‌தால் இதை ம‌ட்டும் ஊரில் பார்த்துவிட்டு, ம‌ற்ற‌ ப‌ட‌ங்களையெல்லாம் ச‌த்ய‌ம், சத்ய‌ம் & ச‌த்ய‌ம்...

****************




சமீப‌ மாத‌ங்க‌ளில் புகைப்ப‌ட‌ம் எடுக்கும் ஆர்வ‌ம் அதிக‌மாயிருக்கிற‌து. பார்க்கும் விஷ‌ய‌ங்க‌ளில் பிடிக்கின்ற‌ எதையும் உட‌னே கைது செய்து, http://flickr.com/photos/raghuclicksல் ரிலீஸ் செய்துவிடுகிறேன். ஃபோட்டோஷாப்பில் எந்த‌ வித்தைக‌ளும் செய்வ‌தில்லை.

இர‌ண்டு கார‌ண‌ங்க‌ள். ஒன்று சோம்ப‌ல். ம‌ற்றொன்று, என்ன‌தான் நாம் எடுக்கும் ப‌ட‌ங்க‌ளை ஃபோட்டோஷாப்பில் விளையாடி கூடுத‌ல் அழ‌காக்கினாலும், அது உண்மைய‌ல்ல‌ என்று ம‌ன‌துக்கு உறுத்தும்போது ந‌ன்றாக‌ வ‌ந்திருக்கும் ஃபோட்டோ கூட‌ பிடிக்காம‌ல் போய்விடுகிற‌து.

****************

பெட்ரோல் விலை -  இதை நினைத்து ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் புல‌ம்புவ‌தை த‌விர‌ ஒன்றும் செய்ய‌முடிய‌வில்லை. இன்னொரு முறை விலையேற்றினால், வீட்டை விட்டு போய்டுவோம் என்று ம‌ம்தா பான‌ர்ஜி ம‌ன்மொக‌ன்சிங்கிற்கு ப‌ய‌ம் காட்டியிருக்கிறார். பிஜேபி, க‌ம்யூனிஸ்ட்டுக‌ளெல்லாம் கார‌சார‌மாக‌ மீடியாவின் ப‌சிக்குதான் உண‌வு அளிக்கிறார்க‌ள். வேறு ஒன்றையும் கிழிக்க‌வில்லை. நான் முடிவு செய்துவிட்டேன். அடுத்த‌ பாராளும‌ன்ற‌த் தேர்த‌லில், சுயேட்சையாக‌ நிற்கும் குப்ப‌னுக்கோ, சுப்ப‌னுக்கோ ஓட்டு போட்டாலும் போடுவேனே த‌விர‌ ச‌த்தியமாக‌ காங்கிர‌சிற்கு கிடையாது.

****************

ப‌ல‌ நாட்க‌ளாக‌ க‌வ‌னித்துக்கொண்டு இருக்கிறேன். ப‌திவு எழுதும் நிறைய‌ பேர், பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ள் உட்ப‌ட‌, த‌ங்க‌ளுக்கு வ‌ரும் பின்னூட்ட‌ங்க‌ளுக்கு ஒரு ந‌ன்றி பின்னூட்ட‌ம் கூட‌ இடுவ‌தில்லை. ஏன் இப்ப‌டி ஒரு அல‌ட்சிய‌ம்? நேர‌மில்லை என்றெல்லாம் சொன்னால் க‌ண்டிப்பாக‌ நான் ந‌ம்ப‌மாட்டேன். ஆறேழு ப‌த்தியில் ப‌‌திவெழுதி, இருக்கின்ற‌ திர‌ட்டிக‌ளிலெல்லாம் இணைக்க‌‌ நேர‌ம் கிடைக்கும்போது, ஒரு ந‌ன்றி சொல்ல‌வா நேர‌ம் இல்லாம‌ல் போய்விட்ட‌து?


Tuesday, November 01, 2011

தீபாவ‌ளி - ப‌ய‌ண இம்சைக‌ள், ப‌ட‌ங்க‌ள் & SADDA HAQ

MAN PROPOSES, GOD DISPOSES........ON THE FESTIVAL DAY TOO!

தீபாவ‌ளி அன்று ஊருக்குச் செல்ல‌ இதுதான் ப்ளான். காலை ஆறு மணி அளவில் பெருங்குடி ரயில் நிலையத்திலிருந்து பீச் ஸ்டேஷன். பின்பு அங்கிருந்து திருமால்பூர் செல்லும் ரயில் மூலமாக ஊருக்கு செல்ல வேண்டும்.

காலையில் அலாரம் வைத்து மூன்று முறை ஸ்நூஸ் செய்து கஷ்டப்பட்டு எழுந்து அவசரவசரமாக பெருங்குடி ரயில் நிலையத்திற்கு ஓடினால் ஓடினால், வாழ்க்கையின் ஓர‌த்திற்கே ஓடிய‌து போல் ஓடினால், "இன்று ரயில் சேவை ஞாயிறு அட்டவணைப்படி செயல்படும்" என்று போர்ட் வைத்திருந்தார்கள்.


அப்படியென்றால் முதல் ரயில் காலை 6:53க்கு. பீச் ஸ்டேஷனில் திருமால்பூர் ரயில் காலை 7:05க்கு. அடடா ஆரம்பமே அசத்தலா இருக்கே! சரி என்ன செய்வது? பேபி நகர் பஸ் ஸ்டாப் சென்று அங்கிருந்து பஸ் பிடித்து கோயம்பேடு போய்விடலாம்.

ஆர்வ‌மாக‌ ர‌யில் நிலைய‌த்திலிருந்து வெளியே வ‌ந்து பார்த்தால்.............ப‌க்க‌த்தில் ம‌ட்டும் த‌ம‌ன்னா இருந்திருந்தால் "அட‌டா ம‌ழ‌டா அட‌ம‌ழ‌டா" என்று ஆடியிருப்பேன். வான‌த்தை நிமிர்ந்து பார்த்தேன். அந்தாள் (ம‌ன‌துக்கு மிக‌ நெருக்க‌மான‌ க‌ட‌வுள்) அங்கிருந்து "உன்னை அவ்ளோ சீக்கிர‌ம் போக‌ விட்ருவ‌னா?" என்று கேட்ப‌து போலிருந்த‌து. அரை ம‌ணி நேர‌ம் காத்திருந்தேன். க‌ளைத்துப்போன‌ ம‌ழை, தூற‌லாக‌ இளைத்துப்போயிருந்த‌து. ப‌ஸ் ஸ்டாப்புக்கு 'ர‌ன்'னினேன்.

கால் ம‌ணி நேர‌ம் கால் க‌டுக்க‌ காத்திருந்தேன். ஹுஹும் M70 எட்டிக்கூட‌ பார்க்க‌வில்லை. M7 வ‌ந்த‌து. தி.ந‌க‌ர் சென்று அங்கிருந்து ஏசி ப‌ஸ்ஸில் சென்றுவிட‌லாம் என‌ தோன்றிய‌து. ம‌ழையில் ந‌னைந்து, குளிரில் ந‌டுங்கி, ஏசி ப‌ஸ்ஸில் ப‌ய‌ண‌ம் செய்து ஊருக்கு போனால்..... வீட்டில் நுழைந்த‌வுட‌ன் "சமைய‌ல்லாம் முடிஞ்சிடுச்சு, ப‌டைக்க‌ வேண்டிய‌துதான். சீக்கிர‌ம் த‌லைக்கு குளிச்சுட்டு வா" என்றார்க‌ள்.  என்ன‌ வாழ்க்கைடா இது!


ROCKSTAR ர‌ஹ்மான்

விரைவில் வெளிவ‌ர‌‌ப்போகும் ஹிந்தி திரைப்ப‌ட‌மான‌ ராக்ஸ்டார் ப‌ட‌த்திற்கு ந‌ம் ர‌ஹ்மான்தான் இசைய‌மைத்திருக்கிறார். இப்ப‌டத்தில் வ‌ரும் "ச‌ட்டா ஹ‌க்" பாட‌லை கேட்கும்போதே உள்ளுக்குள் ஏதோ செய்கிற‌து. விஷுவ‌லில் ர‌ன்பீர் க‌பூரும் அச‌த்துகிறார். ச‌மீப‌ நாட்க‌ளில் இந்த‌ பாட‌லைப் போல‌ வேறேதும் ம‌ன‌ம் க‌வ‌ர‌வில்லை. அடுத்த‌து வேண்டுமானால் "ச‌ம்ம‌க் ச‌ல்லோ"வை சொல்ல‌லாம்.

பார்த்து ர‌சிக்க‌

கேட்டு ர‌சிக்க‌




தீபாவ‌ளி ப‌ட‌ங்க‌ள்

ப‌திவு எழுதுப‌வ‌ர்க‌ளிடையே இருக்கும் மிக‌ப்பெரிய‌ பிர‌ச்னை, விம‌ர்ச‌ன‌ம் எழுதுகிறேன் என்று பெரும்பாலும் 90 ச‌த‌வீத‌ம் க‌தையை சொல்லிவிடுகிறார்க‌ள். அத‌ன் பின் தியேட்ட‌ருக்கு போனால் என்ன‌ ஆர்வம் இருக்கும்? என‌வே இப்போதெல்லாம் நான் பார்க்காத‌ ப‌ட‌ங்க‌ளின் விம‌ர்ச‌ன‌ங்க‌ளை ம‌ட்டுமே வாசிக்கிறேன்.

அலுவ‌ல‌க‌த்தில் என்ன‌தான் பாஸிட்டிவ், நெக‌ட்டிவ் க‌மெண்ட்ஸ்க‌ளாக‌ கேட்டாலும், "7ஆம் அறிவு" பார்க்கும் ஆர்வ‌ம் இன்னும் குறைய‌வில்லை. அதேபோல் ஷாருக்கிற்காக‌ "Ra.One". இது 3Dயிலும் ரிலீஸாகியிருக்கிற‌து என்று நினைக்கிறேன். இர‌ண்டையும் ச‌த்ய‌த்தில்தான் பார்க்க‌ வேண்டும்.

வேலாயுத‌ம்? ஜெயா டிவியில் காமெடி சீன்ஸ் போடும்போது பார்த்துக்கொள்கிறேன். :-)

Wednesday, October 12, 2011

வேலை - கிடைக்கும் முன், கிடைத்த‌ பின்

ந‌ன்றாக‌ நினைவிருக்கிற‌து. க‌ல்லூரி ப‌டிப்பு முடித்து வேலை தேடும் ப‌ட‌ல‌ம் ஆர‌ம்பித்த‌ ச‌ம‌ய‌ம். தொட‌க்க‌த்தில் முழு வீச்சுட‌ன் க‌ள‌த்தில் இற‌ங்கினேன். ஆப்டிட்யூட் டெஸ்ட்டில் என‌க்கு இய‌ல்பாக‌வே ஆர்வ‌ம் இருந்த‌தால், எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் ப‌த்திரிக்கையில் வெளியான‌ அத்த‌னை வ‌ங்கி தேர்வுக‌ளுக்கும் விண்ண‌ப்பித்திருந்தேன்.

ப‌ள்ளி, க‌ல்லூரி தேர்வுக‌ளுக்குக் கூட‌ அப்ப‌டி ப‌டித்த‌தில்லை. த‌லையெழுத்தை நிர்ண‌யிக்க‌ப்போகும் தேர்வு என்ப‌தால் ஒவ்வொரு முறையும் முட்டி மோதினேன். ஹுஹூம்.. என்ன‌தான் முட்டி மோதினாலும், 'ஆன‌ந்த‌ விகட‌ன்' தாத்தா போல‌ என் த‌லையும் வீங்கி போன‌தே த‌விர‌ ஒரு பிர‌யோஜ‌ன‌மும் இல்லை. நிஜ‌த்திலும் ஒரு ஐந்து நிமிட‌ பாட‌லில் ப‌ண‌க்கார‌னாகிவிட்டால் எவ்வ‌ள‌வு ந‌ன்றாக‌ இருக்கும் என்று ஏங்கிய‌ த‌ருண‌ங்க‌ள் அது. 

கிட்ட‌த‌ட்ட‌ எழெட்டு தேர்வுக‌ள் எழுதி முடிக்கையில் ப‌ல‌ மாத‌ங்க‌ளை விழுங்கியிருந்த‌து வாழ்க்கை. அத‌ற்கு பின் வேறு வேலை தேட‌ ஆர‌ம்பித்து, சில‌ நேர்முக‌த் தேர்வுக‌ளுக்குப் பின் ஸ்பென்ச‌ர் ப்ளாஸாவிலிருந்த‌ ஒரு அலுவ‌ல‌க‌த்தில் வேலை கிடைத்த‌து. ஆனால் இந்த‌ வேலை கிடைக்கும் முன் வாழ்ந்தேனே ஒன்ற‌ரை வ‌ருட‌ வாழ்க்கை. கொடுமை!

வேலைக்கு போகாம‌ த‌ண்ட‌மா இருக்கியே என்று அப்பாவோ அம்மாவோ ஒருபோதும் கேட்ட‌தில்லை. எப்போதும் ம‌ன‌திற்குள் இருக்கும் க‌ஷ்ட‌த்தை வெளிப்ப‌டுத்திக்கொள்ள‌ மாட்டேன் என்றாலும், என்னை பார்க்கும்போதே அவ‌ர்க‌ளுக்கு புரிந்திருக்க‌க்கூடும். க‌ட‌ந்த‌ ஆட்சியில் திமுக‌வுக்கு பாம‌க‌ போல‌ல்லாம‌ல் மிகுந்த‌ ஆத‌ர‌வாக‌ இருந்தார்க‌ள். 

ஆனால் இந்த‌ சொந்த‌க்கார‌ர்க‌ள் என்னும் பெய‌ரில் சில‌ டார்ச்ச‌ர்க‌ள் இருக்கிறார்க‌ளே, அவ‌ர்க‌ளின் இம்சைதான் பெரிய‌ள‌வில் இருந்த‌து. ஏதாவ‌து உத‌வி செய்வோம் என்றெண்ணி அம்மாவிட‌ம் கேட்டு, காபிதூள் வாங்க‌ க‌டைக்குச் சென்றால், அங்கு யாரேனும் ஒருவ‌ர் வ‌ந்து தொலைப்பார். 





"என்ன‌ப்பா ப‌டிக்க‌ற‌?"

"எம்.எஸ்.சி முடிச்சிருக்கேன். ஜாப் ட்ரை ப‌ண்ணிட்டிருக்கேன்"

பாஸிட்டிவ்வாக‌ இருக்க‌வேண்டும் என்று ப‌ல‌ த‌ன்ன‌ம்பிக்கை க‌ட்டுரைக‌ளில் ப‌டித்திருந்த‌தால், 'ஜாப் ட்ரை ப‌ண்ணிட்டிருக்கேன்' என்றுதான் சொல்வேன். சும்மா இருக்கிறேன் என்று சொல்ல‌ மாட்டேன். ஆனால் உட‌னே அவ‌ர் கேட்பார்.

"ஓ, சும்மாதான் இருக்கியா?"

மிகைப்ப‌டுத்தி சொல்ல‌வில்லை, அக்க‌ண‌த்தில் நிஜமாக‌வே செருப்பால் அடித்த‌து போன்ற‌ ஒரு உண‌ர்வு ஏற்ப‌டும். இதை வீட்டில் சொல்ல‌வும் முடியாது. சொன்னால் அவ‌ர்க‌ளும் வ‌ருத்த‌ப்ப‌டுவார்க‌ள். அவ‌ரிட‌மும் ஏன் இப்ப‌டி கேக்க‌றீங்க‌ என்று நேர‌டியாக‌ கேட்கும‌ள‌வுக்கு ம‌ன‌தில் தெம்பில்லை. நொறுங்கிப்போயிருந்த‌ கால‌க‌ட்ட‌ம் அது. 

காய‌ம் ப‌ட்ட‌ இட‌த்திலேயே திருப்பி திருப்பி அடித்த‌வ‌ர்க‌ளிட‌மிருந்து இன்னும் வில‌கியே இருக்கிறேன். எங்கேயாவ‌து பார்த்து 'எப்ப‌டிப்பா இருக்க‌, எங்க‌ வேலை செய்ய‌ற‌' என்று கேட்டால் கூட‌, 'ந‌ல்லாயிருக்கேன்' என்று ஆர‌ம்பித்து அலுவ‌ல‌க‌ம் ப‌ற்றி சொல்வ‌தோடு ச‌ரி. ம‌ன‌தார‌ யாரிட‌மும் சிரித்து பேசுவ‌தில்லை.

இன்ன‌மும் சில‌ர் ஆட்டிட்யூட் மாற‌வில்லை. அலுவ‌ல‌க‌ம் பெய‌ர் சொல்லி சாஃப்ட்வேர் டெஸ்டிங்ல‌ இருக்கேன் என்று சொன்னால் 'இந்த‌ பேர்ல‌ ஒரு ப‌ஸ் கூட‌ ரோட்ல‌ பார்த்த‌தில்லையே' என்று கேட்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளை பொறுத்த‌வ‌ரை இன்ஃபோசிஸ், டிசிஎஸ், சிடிஎஸ், விப்ரோ...இவைதான் இந்தியாவிலுள்ள‌ மென்பொருள் நிறுவ‌ன‌ங்க‌ள். 

சில‌ரிட‌மிருந்து வில‌கி இருத்த‌லே நல‌ம்.

Wednesday, September 28, 2011

இன்னுமா இப்படிலாம் இருக்காங்க?!

கடந்த சில வாரங்களாக விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியை தவறாமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனக்கென்னவோ விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சிகளிலேயே இது ஒன்றுதான் பிடித்தமானதாக இருக்கிறது. சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், கனா காணும் காலங்கள்...இதையெல்லாம் பார்த்தால் குமட்டிக்கொண்டு வருகிறது. சரி விஷயத்துக்கு வருவோம்.

நீயா நானாவில் கோபியின் ஆளுமை பற்றி சொல்லவேண்டியதில்லை. ஒரு சில் சமயம் படு மொக்கையான தலைப்புகள், கருத்துகள் என கொஞ்சம் குறைகள் இருந்தாலும், பெரும்பாலான சமயம் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. சென்ற வாரம் ‘வார்த்தை’ குறித்தான தலைப்பில் ஆண்கள் ஒரு தரப்பிலும், பெண்கள் ஒரு தரப்பிலும் பேசிக்கொண்டிருந்தனர்.

உங்களை காயப்படுத்திய எந்த வார்த்தை இன்னும் நினைவிலிருக்கிறது என்று கேட்டபோது ஒரு பெண் சொன்னார். அவரின் நண்பர் ஒரு முறை கேட்டாராம், “கூட ஒரு ஆம்பளை நடக்கும்போது நீ பாட்டுக்கு முன்னாடி போறீயே, குடும்ப பொம்பளை மாதிரியா நடந்துக்கறே” என்று. இதைச் சொல்லும் முன் வரை அந்த பெண் மிகுந்த சந்தோஷத்துடன் கலகலப்பாகத்தான் பேசிக்கொண்டிருந்தார். இதைச் சொல்லும்போதுதான், லேசாக அவர் குரல் உடைந்து ஏறக்குறைய அழும் நிலையில் பேசினார். அதற்கு பின் அவருக்கு கோபி பதிலளித்ததெல்லாம் வேறு கதை.




இதை பார்த்துக்கொண்டிருக்கும்போது எனக்குள் எழுந்த கேள்வி, இன்னும் கூடவா ஒரு பெண் தனக்கு பின்தான் வரவேண்டும் என்று நினைக்கும் ஆண்கள் இருக்கிறார்கள்? நிஜமாகவே ஆச்சரியமாக இருக்கிறது. நான் ஏதோ பெண் விடுதலைக்குப் போராடுபவனோ, மேடைகளில் பெண்களின் புகழைப் பாடுபவனோ அல்ல.

பெண்ணை சக மனுஷியாக மட்டுமே பார்க்கிறேன். அலுவலகத்தில் சிறப்பாக பணிபுரிந்தால் பாராட்டுகிறேன், ஏதேனும் தவறு செய்தால் சற்றே கடிந்துகொள்கிறேன், நெருங்கிய நட்பென்றால் சகஜமாக கிண்டலடிக்கிறேன். அவ்வளவே. ‘டி’ போட்டு பேசும் உரிமை கொடுத்தவளை ஏன் ‘டா’ போட்டு பேசுகிறாய் என்று ஒருபோதும் கேட்டதில்லை.

சில நாட்கள் முன் பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார். அவர்களுடைய எதிர் வீட்டில் இருக்கும் பையனுக்கு பெண் பார்க்க சென்றிருக்கின்றனர். குடும்பத்தோடு போயிருந்ததில், மூத்த உறுப்பினர் ஒருவர் சபையிலேயே கேட்டிருக்கிறார், “பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமா” என்று. பதிலுக்கு அந்த பெண், ”நீங்க என்ன சமையல்காரியையா பார்க்க வந்திருக்கீங்க” என்று எதிர் கேள்வி தொடுத்திருக்கிறார். இதைச் சொல்லும்போது, பாட்டி அந்த பெண்ணை பற்றித்தான் குறைபட்டுக்கொண்டார்.

ஆனால் எனக்கு அந்த பெண் கேட்டது பிடித்திருந்தது. சமைக்கத் தெரியுமா என்று கேட்பது நியாயமெனில், பையனோட மெடிக்கல் சர்டிஃபிகேட் வேண்டும் என்று பெண் வீட்டார் கேட்டால் அதுவும் நியாயம்தான். ஆனால் இன்றைய சமூகத்தில் இதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள்?

பெண் என்பவள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணம் இன்னும் வீட்டிலுள்ள பெரியவர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் காணமுடிகிறது. நாம் ஏதேனும் எடுத்துச் சொல்லி இந்த வயதிற்கு மேல் அவர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கை துளியும் இல்லை. எனவே அதுபோன்ற ஆபத்தான முயற்சிகளிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் வருங்காலத்தில் இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் இருக்காது என்றே எண்ணுகிறேன்...பார்ப்போம்.

Tuesday, August 16, 2011

ம‌ங்காத்தா - ம‌ச்சி ஓப்ப‌ன் த‌ பாட்டில்!

நான் பெரும்பாலும் ப‌ட‌த்தின் இய‌க்குன‌ரை பொறுத்துதான் ப‌ட‌ம் பார்க்க‌லாமா வேண்டாமா என்ப‌தை முடிவு செய்வேன். சும்மா சீனுக்காக‌ சொல்லவில்லை. என்னை பொறுத்த‌வ‌ரை த‌லைவ‌ர் (ஸ்க்ரீனில் ம‌ட்டும்) என்றால் அது சூப்ப‌ர் ஸ்டார்தான்.

என் த‌ம்பி அஜித் ர‌சிக‌ன். ப‌ட‌ ரிலீஸ‌ன்று கொடி க‌ட்டி க‌ட் அவுட் வைக்கும் அள‌வுக்கு போக‌வில்லையே த‌விர‌ ஜ‌னா, ஆஞ்ச‌னேயா, ஆழ்வார் முத‌ற்கொண்டு அஜித் எவ்வ‌ள‌வு அடித்தாலும் தாங்கும் வ‌ல்ல‌மை கொண்ட‌வ‌ன்.

வீட்டிலுள்ள‌ க‌ணிணியில் ம‌ங்காத்தா பாட‌ல்க‌ளை ட‌வுண்லோட் செய்துவைத்திருந்தான். 'டே செல்லப்பா என்ன‌மோ சினிமா எடுக்க‌ப்போறேன் சினிமா எடுக்க‌ப்போறேன்னு சுத்த‌றியே, அந்த‌ க‌தைய‌தான் சொல்லேன்' என்று ஒரு அல‌ட்சிய‌ தொனியில் பாலையா கேட்பாரே, அதே தொனியில்தான் பாட‌ல்க‌ளை கேட்க‌ ஆர‌ம்பித்தேன்.

ச‌ரி எந்த‌ பில்ட‌ப்பும் வேண்டாம். மொத்த‌ம் நான்கு பாட‌ல்க‌ள் ப்ள‌ஸ் ஒரு தீம் ம்யூசிக். மீண்டும் மீண்டும் மொத்த‌ம் மூன்று முறை கேட்டேன். க‌டைசியில் மிக‌வும் பிடித்துப் போன‌து, ச‌த்திய‌மாக‌ தீம் ம்யூசிக்தான்.

என‌க்கு எப்போதும் ஒரு ப‌ட‌த்தின் தீம் ம்யூசிக்தான் ஃபேவ‌ரைட். அதை கேட்கும்போதே ப‌ட‌த்தின் மூட் ந‌ம‌க்கு செட்டாக‌வேண்டும். அப்ப‌டி ஆகிவிட்டால், க‌ண்டிப்பாக‌ அந்த‌ ம்யூசிக் ஹிட்தான். இன்ற‌ள‌விலும், எத்த‌னை முறை கேட்டாலும் ச‌லிக்காம‌ல் இருப்ப‌து 'மிஷ‌ன் இம்பாஸிபிள்' தீம் ம்யூசிக்தான்.




யுவ‌னின் 7ஜி ரெய்ன்போ கால‌னி தீம் ம்யூசிக் கேட்டிருப்பீர்க‌ள். கொஞ்ச‌ம் காத‌ல், கொஞ்ச‌ம் சோக‌ம், கொஞ்ச‌ம் உற்சாக‌ம், கொஞ்ச‌ம் நெகிழ்வு என்று அள்ளி கொடுத்திருப்பார். என‌க்கென்ன‌வோ 7ஜிக்கு பிற‌கு ம‌ங்காத்தா தீம் ம்யூசிக்தான் பெஸ்ட் என்று தோன்றுகிற‌து.

முத‌ன்முறை கேட்கும்போதே ம‌ன‌ம் ஒரு த்ரில்ல‌ர் மூடுக்கு போய்விடுகிற‌து. இன்று ம‌ட்டும் கிட்ட‌த‌ட்ட‌ ப‌தினைன்து முறைக்கு மேல் கேட்டிருப்பேன். துளியும் ச‌லிக்க‌வில்லை.




தீம் ம்யூசிக்கிற்கு அடுத்த‌து, பாட‌ல்க‌ள் கேட்கையில், முத‌ன் முறை கேட்ட‌வுட‌ன் பிடித்த‌து, 'ம‌ச்சி, ஓப்ப‌ன் த‌ பாட்டில்'தான். யுவ‌ன்-வெங்க‌ட்பிர‌புவின் அடுத்த‌ 'ச‌ரோஜா சாமான் நிகாலோ'. ப‌ட‌ம் ரிலீஸான‌வுட‌ன், இந்த‌ பாட‌லை இசை சேன‌ல்க‌ளில் த‌ம‌க்கு பிடித்த‌மான‌வ‌ர்க‌ளுக்கு டெடிகேட் செய்ய‌ ந‌ம் ம‌க்க‌ள் ஆவ‌லோடு காத்துக்கொண்டிருப்ப‌ர்.

ப்ரேம்ஜியின் குர‌லில் 'ம‌ச்சி ஓப்ப‌ன் த‌ பாட்டில்' என்று ஆர‌ம்பிக்கும் உற்சாக‌ம், பாட‌ல் முடியும்வ‌ரை துளியும் குறையாதிருக்கிற‌து. வெகு நாட்க‌ளுக்குப்பின் ம‌னோ குர‌லை கேட்ப‌து இனிமை. 'ராம‌ன் ஆண்டாலும் ராவ‌ண‌ன் ஆண்டாலும் என‌க்கொரு க‌வ‌லையில்லே' என்ற‌ வ‌ரிக‌ளை சேர்த்திருப்ப‌து த‌யாரிப்பாள‌ருக்குத் தெரியுமா? ஆனாலும் வெங்க‌ட்பிர‌புவுக்கு குசும்பு ஜாஸ்திதான் :)

'விளையாடு ம‌ங்காத்தா'வை முத‌லில் ர‌சித்த‌ அள‌வு இப்போது ர‌சிக்க‌முடிய‌வில்லை. அந்த‌ இட‌த்தை தீம் ம்யூசிக் பறித்துவிட்ட‌து. 'இது எங்க‌ ப‌ல்லேல‌க்கா'வும், 'வாடா பின்லேடா'வும் இன்னும் அவ்வ‌ள‌வாக‌ ஈர்க்க‌வில்லை. கொஞ்ச‌ம் த‌னுஷ் டைப் பாட‌ல்க‌ளாக‌ இருக்கின்ற‌ன‌. இன்னும் சில‌ முறை கேட்க‌வேண்டும்.

Saturday, August 13, 2011

ப்ளாஸ்டிக் கவர்களுக்கு மாற்று வழி இல்லையா?

சமீபத்தில் ‘மோர்சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தேன். எல்லா பொருள்களும் வாங்கியபின் பில் போடுகையில், அந்த பெண் கேட்டார், “பை கொண்டுவந்திருக்கீங்களா?

எனக்கு சட்டென புரியவில்லை, எப்போதும் கேட்காதவர் ஏன் இப்போது கேட்கிறார்? “இல்லை என்றேன்.

“கவருக்கு எக்ஸ்ட்ரா சார்ஜ், ரெண்டு ரூபா சார்

“ஏன்?

“கவர்ன்மெண்ட் ப்ளாஸ்டிக் கவர்லாம் பேன் பண்ணியிருக்காங்க சார், நீங்க வீட்டுலர்ந்து கவர் எடுத்துட்டு வரலாம் இல்ல எங்ககிட்ட வாங்கினீங்கன்னா கவருக்கு சார்ஜ் போட்டு கொடுத்துடுவோம்




ஏதோ கவுன்டர் அட்டாக் கொடுப்பதாக நினைத்து அப்படின்னா கவர் சார்ஜையும் பில்லில் போட்டுக்குடுங்க என்றேன். அப்படியே பில் போட்டு கொடுத்துவிட்டாலும், நுகர்வோர் நீதி மன்றத்தில் முதலில் வழக்கு ஒன்றை தொடுத்துவிட்டுதான் மறு வேலை பார்ப்பது போல.

சிறிதும் தயக்கமின்றி அவரும் பில்லில் கவர் சார்ஜை போட்டுத்தந்தார். வேறேதும் பேசாமல் வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன்.

இது என்ன லாஜிக் என்றே தெரியவில்லை. ப்ளாஸ்டிக் கவர்களை தடை செய்வது சுற்றுப்புறச்சூழலுக்கு ரொம்ப நல்ல விஷயம்தான். ஆனால் அதற்கு ஒரு மாற்று வழி ஒன்றை முறைப்படுத்தாமல் எப்படி இதை அமல்படுத்துகிறார்கள் என்றே தெரியவில்லை.

அரசாங்கத்தை நொந்துகொள்வதா அல்லது வாய்க்கு வந்தபடி திட்டுவதா? ஓரிரு பொருட்கள் வாங்கும்போது சரி, வீட்டிலிருந்து ஏதேனும் ஒரு பையை எடுத்துக்கொண்டு போகலாம். வேறு வேறு கடைகளுக்குச் சென்று பல பொருள்கள் வாங்கும்போது, நாமென்ன கோணிப்பையையா தூக்கிக்கொண்டு போகமுடியும்?

ப்ளாஸ்டிக்கை தடை செய்தபின் அதற்கு மாற்றாக விற்பனையாளர்கள்தானே நுகர்வோருக்கு வேறு ஏதேனும் ஒன்றை ஈடுசெய்ய வேண்டும். அதை செய்யாமல் ஏன் நம் மீது திணிக்கிறார்கள்? ம்ம்...என்ன கத்தினாலும் ஒன்றும் மாறிவிடப்போவதில்லை. சலித்துப்போகும் வரை புலம்பவேண்டியதுதான்.


Thursday, June 23, 2011

சீரியல்.......கில்லர்தான் இப்பொழுதும்

ஆசை ஆசையாக ஒரு எல்சிடி டிவி வாங்கி ஆறு மாதம் ஆகிறது. முன்பே சொன்னதுபோல் சத்தியமாக சச்சினுக்காகத்தான் வாங்கினோம். எனவே உலகக்கோப்பையை இந்தியா வென்றதில் மிகுந்த மகிழ்ச்சியே.


உலகக் கோப்பைக்கு பின்புதான் மற்ற சேனல்களை கொஞ்சம் கொஞ்சமாக பார்க்க ஆரம்பித்தேன். ஒரு வார காலத்தில் ஐபிஎல் ஆரம்பித்தாலும், மனம் பெரிதளவில் அதில் லயிக்கவில்லை. எல்லா சேனல்களிலும் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் பெரிய தலைவலி. ஆடுவதும், பாடுவதும், அதற்கு நாட்டாமைகள் மூவர் தீர்ப்பு சொல்வதும் ஒருவித எரிச்சலையே தருகிறது. ஒரு சில வாரங்கள் மட்டுமே ’நீயா நானா’ கோபி ஈர்க்கிறார். மற்ற சமயங்களில் மரண மொக்கை. சிவகார்த்திகேயனின் ‘அது இது எது’வுக்கும் இது பொருந்தும்.

ஹிந்தி நியூஸ் சேனல்கள் பற்றி ஏற்கனவே அறிந்ததுதான். இருந்தாலும் எப்படி ஒன்றுக்கும் உதவாத செய்திகளையெல்லாம் ஓவர் நைட்டில் சென்சேஷன் ஆக்குகிறார்கள் என்றே தெரியவில்லை. அதுவும் ராஜ்தீப் சர்தேசாய்...ம்ம் ஒன்றும் சொல்வதற்கில்லை. தமிழில் பரவாயில்லை, சன் நியூஸையும், ஜெயாவையும் பார்ப்பது மிகுந்த ஆனந்தத்தையே தருகிறது. ஒருவரை ஒருவர் எவ்வளவு அழகாக மானத்தை வாங்குகிறார்கள். கீப் இட் அப் கைஸ்!

ஆங்கில படங்கள் பக்கம் போனால், இப்போதைக்கு ஸ்டார் மூவிஸ், ஹெச்பீஓ, சோனி பிக்ஸ், ஸீ ஸ்டுடியோ, யூடிவி வேர்ல்ட் மூவிஸ் ஆகிய சேனல்களை சப்ஸ்க்ரைப் செய்திருக்கிறேன். மூவிஸ் நவ் எப்படியிருக்கிறதென்று தெரியவில்லை. இவற்றில் தினமும் படம் பார்க்க முடியவில்லை என்றாலும், ஞாயிறுகளிலாவது ஏதேனும் ஒரு படம் முழுதாய் பார்க்கமுடிகிறது. வாரயிறுதிகளில் மட்டும் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல நல்ல படங்களை ஒளிபரப்புகிறார்கள். 

திரைப்படங்கள் ஒளிபரப்புவதில் நிஜமாகவே அசத்துபவர்கள் ஹிந்தி சேனல்கள்தான். வெளியான சில நாட்களிலேயே, எவ்வளவு சூப்பர் ஹிட்டாக இருந்தாலும், ஏதேனும் ஒரு சேனலில் ஹிந்தி படங்கள் ரிலீஸாகிவிடுகின்றன. கஜினி, டபங், பேண்ட் பாஜா பாராத், கோல்மால் 3 என ஹிட்டான படங்களையும் சீக்கிரம் சின்னத்திரையில் பார்ப்பது ஆச்சரியத்தையே தருகின்றன. நம்மாட்கள்தான் விசேஷ நாட்களில் மட்டும், இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக வெளியிடுகின்றனர். 

சில வருடங்கள் முன்பு எந்த நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தாலும், விளம்பரங்கள் வந்துவிட்டால் சேனலை மாற்றிவிடுவேன். விளம்பரங்களைப் பார்ப்பதற்கா ரிமோட் வைத்திருக்கிறோம் எனத் தோன்றும். ஆனால் இப்போதெல்லாம் விளம்பரங்கள்தான் தொலைக்காட்சி அனுபவத்தை சுவாரஸ்யப்படுத்துகின்றன. நிறைய பேர் க்ரியேட்டிவிட்டியில் பின்னி எடுக்கிறார்கள்.



டெய்ரி மிலக் - ‘எங்கிட்ட எப்ப கடைசியா ஐ லவ் யூ சொன்ன’ என்று கேட்கும் மனைவியிடம், கணவன் முதலில் கொஞ்சம் தயங்கி டெய்ரி மில்க் கொடுத்துவிட்டு ‘இதோ இப்போ’ என சொல்லும் விளம்பரம். இந்த விளம்பரத்தில், அலட்டிக்கொள்ளாத கணவனும், கடைசியில் அசத்தலான ரியாக்‌ஷன் காட்டும் மனைவியும், மனதை அள்ளுகின்றனர். இசையும் ரசிக்கும்படி இருந்தது.

இப்போது யோசிக்கையில் எதற்கான விளம்பரம் என்று நினைவுக்கு வரவில்லை. ஒரு முகமூடித் திருடன் வங்கியை கொள்ளையடித்துக்கொண்டு போனபின், வயதான பெண்மணியொருவர் ‘செக்யூரிட்டீஈஈஈஈ’ என கத்த, முகமூடி திருடனே வந்து சலாம் போட்டு நிற்பார். திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சி போல் இவ்விளம்பரம் அமைந்திருந்தது அருமை.

முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், ரன்பீர் கபூரின் ரியாக்‌ஷன்ஸ் அசத்தலாய் இருக்கிறது டோகோமோ விளம்பரத்தில். ரன்பீரை தவிர பெரியளவு பொருட்செலவு செய்யாமல் எடுத்திருக்கின்றனர். அவர்களுடைய பாஸ் சொல்லியிருப்பார் போல, ‘கீப் இட் சிம்பிள் ஸில்லி’ என்று. 

அறிமுகமான புதிதில் இருந்த சுவாரஸ்யம் இப்போது அவ்வளவாய் ஜுஜூ விளம்பரங்களில் இருப்பதில்லை, மூன்று பேருடன் டேபிள் டென்னிஸ் ஆடும் விளம்பரம் தவிர்த்து. இவ்விளம்பரத்தைப் பார்த்தபோது, கை தொடாமல் முறைத்து பார்த்தே ஒரு ரயிலை பின்னோக்கி ஓடச்செய்யும் பாலகிருஷ்ணா நினைவுக்கு வந்தார். ஜுஜு விளம்பரங்களுக்கு இசையும் மிகப்பெரிய பலம்.





சீரியல்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. பள்ளி நாட்களில்தான் சித்தி, அலைகள், மர்மதேசம் என ஒரு சில சீரியல்களைத் தொடர்ந்து பார்த்திருக்கிறேன். இப்போது மறுஒளிபரப்பு செய்தால்கூட மர்மதேசம் கதைகளை ஆர்வமாக உட்கார்ந்து பார்ப்பேன்.

யதேச்சையாய் ஒரு நாள் மதியம் அலுவலகம் கிளம்புவதற்கு முன் சேனல்களை மாற்றிக்கொண்டிருக்கும்போது, ஏதோவொரு சீரியலில் ‘அலைகள்’ துர்காவைக் காண நேர்ந்தது. அழகு! சில வருடங்களுக்கு முன் பார்த்த ‘அலைகள்’ துர்காவாகவே இன்னமும் இருக்கிறார். என் நினைவு சரியெனில், அப்போதே எஸ்பி சரண் நடித்த ஒரு சீரியலில் வில்லியாகவும் நடித்திருக்கிறார். இந்த பச்சிளங்குழந்தையைப் போய் அழுமூஞ்சி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க எப்படித்தான் இயக்குனருக்கு மனது வருகிறதோ!

சரி துர்காவுக்காக பார்க்கலாம் என முடிவு செய்து அந்த சீரியலைப் பார்த்தால்......ஒரு நாள் துர்கா குடும்பத்தைப் பற்றி காட்சி வந்தால் அடுத்த நான்கு நாட்கள் வேறு சில குடும்பங்களை நோக்கி காட்சி நகர்கிறது.

  • ‘அவளை நான் பழி வாங்காம விடமாட்டேன்’ என கண்ணை உருட்டுகிறார் ஒரு பெண்மணி.

    •  ‘சொத்தை பிரிச்சே ஆகணும்’ என்கிறார் குடும்பத்தின் மூத்த மகன்.

      • ‘எங்கப்பா மேலயா கை வெச்ச, உன்னை கொல்லாம விட மாட்டேண்டா’ என காவல் நிலையம் முன்பே வில்லனை மிரட்டுகிறார் ஒருவர்.

        •  ’எங்க அண்ணனை ஏமாத்துன இல்ல, அதான் நான் உன்னை ஏமாத்தி எங்கண்ணனுக்கு வர வேண்டிய பணத்தை வாங்கிட்டேன்’ என்கிறார் தம்பி. 

          • வீட்டு வெளியே ஒருவர் வந்து, ‘டேய் வெளியே வாடா எங்க ஒளிஞ்சிருக்க’ என்று சத்தம் போட, உள்ளேயிருந்து அமைதியாய் ஒரு பெண் வந்து கூலாக சொல்கிறார், ‘எங்கண்ணண் வீட்ல இல்ல, என் புருஷன் மேல கம்ப்ளைண்ட் குடுக்க போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிருக்கார்’. 


          ப்பா சாமி......முடியல!


          Tuesday, May 31, 2011

          விபரீதக் கோட்பாடு & ஓடாதே! – சுஜாதா

          ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களில், பாதியையாவது மூன்று நான்கு மாதங்களுக்குள் வாசித்துவிடுவேன். ஆனால் இம்முறை நிலைமை தலைகீழ். பல காரணங்களால் புத்தகங்கள் பக்கம் எட்டிக்கூட பார்க்க வாய்ப்பிலாமல், சில சமயம் விருப்பமில்லாமல் இருந்தது.

          சில நாட்கள் முன்பு வாரயிறுதியில் ஊருக்குச் சென்றிருந்தபோது, அங்கு வழக்கம்போல் காலை 11 மணிக்கு மின்சார வாரியம் ஞாயிறென்றும் பாராமல் தன் கடமையில் இறங்கியது. போதாதற்கு சூரிய பகவானும் ஆஸ்ட்ரேலியாவை எதிர்த்தாடும் சச்சினைப் போல் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார். எனவே வெளியே செல்லவும் விருப்பமில்லை. பிறகுதான் இவ்வருடம் வாங்கிய புத்தகங்களின் ஞாபகம் வந்தது.

          அலமாரியில் பல புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தாலும், கண்ணும், கையும் முதலில் நோக்கிச் சென்றது சுஜாதாவை நோக்கித்தான். உண்மையெனினும் ’வழக்கம் போல்’ என்ற சொற்றொடர் முந்தைய வரிக்கு அவசியமில்லாதது. இரு புத்தகங்களை எடுத்தேன். விபரீதக் கோட்பாடு & ஓடாதே.

          இவ்விரண்டு புத்தகங்களும் கிழக்கு பதிப்பக வெளியீடு. எழுத்துப்பிழையெல்லாம் இல்லாமல், தரமான காகிதத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இது ஒன்று போதும் சுஜாதாவை கெளரவப்படுத்த. சென்ற வருடம் வேறொரு பதிப்பகத்தில் வாங்கிய புத்தகத்தில் அவரது எழுத்தை உயிருடன் போஸ்ட்மார்ட்டம் செய்திருந்தார்கள். அவர் வாசித்திருந்தால் ஆங்கிலத்தில் அர்ச்சனை செய்திருப்பார்.


          விபரீதக் கோட்பாடு

          சுஜாதாவின் எழுத்தை நிறைய (சு)வாசித்தவர்கள் இக்கதையில் யார் குற்றவாளியென முதல் நான்கைந்து பக்கங்களிலேயே யூகித்துவிடுவார்கள். ஆனால் மூட நம்பிக்கையை மையமாக வைத்து த்ரில்லராய் கதையை நகர்த்தியிருக்கும் விதம் அட்டகாசம்! கணேஷ் வஸந்திற்காகவே வாசிக்கலாம். இப்போது யோசித்துபார்க்கையில் கண்டிப்பாக இது சுஜாதாவின் பெஸ்ட் அல்ல என்றுதான் தோன்றுகிறது. என்றாலும் தவிர்க்கக்கூடிய கதையும் அல்ல.

          ஓடாதே!

          ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன் எழுதிய கதை. இப்புத்தகத்தின் முன்னுரையில், நிறைய இயக்குனர்கள் இக்கதையை திரைப்படமாக கெடுப்பதற்கு..ஸாரி...எடுப்பதற்கு தன்னை அணுகியதாகக் குறிப்பிட்டுள்ளார் சுஜாதா. அதுவும் ஒரு வேண்டுகோளுடன். பாழாய்ப் போகாத செண்டிமெண்ட் காரணமாக, தலைப்பை மட்டும் மாற்றவேண்டும் என்றார்களாம். ஆனால் இந்த ‘ராஜனுக்கு ராஜன்’ அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே இக்கதை திரைப்படம் ஆகாமல் தப்பித்தது என்று முன்னுரையில் சொல்லியிருக்கிறார்.

          இயக்குனர்கள் இதைக் கேட்குமளவுக்கு கதையில் அப்படியென்ன இருக்கிறது என்ற எண்ணத்தோடுதான் கதையை வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க ஆரம்பித்த சில பக்கங்களிலேயே புரிந்துவிட்டது. புதிதாய் மணமானவர்களிடையே இருக்கும் காமம் கலந்த காதல், இருக்கையின் நுனிக்கு கொண்டுவரச் செய்யும் அட்டகாசமான சேஸிங் - இவையிரண்டையும் சேர்ந்து இக்கதையை ஒரு அட்டகாசமான த்ரில்லராய் படைத்திருக்கிறார் எனதருமை ரங்கன்.

          மணமான மூன்றாம் நாளே, ஒரு குற்றமும் செய்யாத ஜோடியை சென்னை, பெங்களூர் காவல்துறையினர் துரத்துகின்றனர். ஏன்? வேண்டாம், சஸ்பென்ஸை உடைக்கவிரும்பவில்லை. கதையை வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

          நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவங்கள், இலக்கியத்தரமான எழுத்து ஆகியவற்றை எதிர்பார்ப்போருக்கு இவ்விரண்டு புத்தகங்களும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால் த்ரில்லரை மட்டும் விரும்புபவர்களுக்கு இப்புத்தகங்கள் நல்லதொரு விருந்தென்றே கூறுவேன்.

          நல்லவேளை, வாரயிறுதியாக இருந்தாலும் அன்று மின்சார வாரியத்தினர் கடமையே கஜினியாயிருந்தனர். இல்லையெனில் இவ்விரண்டு புத்தகங்களையும் வாசித்திருக்கமாட்டேன். ஆட்சி மாறினாலும் ஆற்காட்டாருக்கு நன்றி! :)


          Tuesday, May 17, 2011

          சுதா ரகுநாதன்

          பதிவெழுத ஆரம்பித்து கிட்டதட்ட இரண்டு வருடங்கள் ஆகிறது. வலைப்பூ மீதான போதை தற்போது குறைந்திருந்தாலும் அவ்வப்போது எழுத வேண்டும் என்ற ஆசை மட்டும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. ஆரம்பத்தில் எழுதியதை இப்போது வாசிக்கையில் எரிச்சல்தான் மிஞ்சுகிறது என் மீது எனக்கு. தட்டுத்தடுமாறி ஏதேதோ எழுதிக்கொண்டிருக்கிறேன். இதுவரை எழுதியதில் மனதிற்கு மகிழ்ச்சியோ, திருப்தியோ தருமளவுக்கு எதுவும் இல்லை. வார்த்தை ஜாலங்கள் எல்லாம் கைகூடாததால் அத்தருணத்தில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதுகிறேன்.



          ம்ம்ம்...யோசித்து பார்க்கையில், மற்றவர்கள் மனம் நோகும்படியோ, அநாகரிகமாகவோ இதுவரை எதையும் எழுதியதில்லை. இவ்விரண்டு வருடங்களில் இதுதான் என்னால் முடிந்த அதிகபட்ச சாதனை(!)


          **********


          வேலைப்பளு. கடந்த சில மாதங்களாக அலுவலகமே வாழ்க்கையாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் (கவனிக்க: குறைந்தபட்சம்) 12 முதல் 14 மணி நேரங்கள்.


          இதனால் இழப்பது நிறைய, குறிப்பாக நட்புகள். நான் குருவாக மதிக்கும் என் நண்பரின் இல்லத்திருமணத்திற்குக்கூட செல்ல முடியாத சூழ்நிலை. அவன் ஓவரா படம் காட்றான், திமிரு புடிச்சவன், எனக்கு கால் பண்றதே இல்ல என்று சில முத்துகள் பலரின் வாயிலிருந்து உதிர்வதை அறிய முடிகிறது. ஒரே ஒரு நண்பர் மட்டும் உன் சிச்சுவேஷன் எனக்கு புரியுதுடா என்றார். மகிழ்ச்சியாக இருந்தது இவர் ஒருவராவது நம்மை புரிந்துகொண்டாரே என்று. பின்பு சொன்னார், எனக்கும் உன் நிலைமைதான்டா, டெய்லி 12 ஹவர்ஸ். ஹுக்கும்...அதானே பார்த்தேன்!


          உண்மையான நட்புகளுக்கு ஒவ்வொன்றுக்கும் விளக்கம் தரவேண்டியதில்லை. ஒவ்வொன்றுக்கும் விளக்கம் எதிர்பார்க்கும் மனிதர்கள் நட்புகளாய் இருக்க வாய்ப்பில்லை. எல்லா மனிதர்களும் எனக்கு வேண்டாம். எனக்குப் பிடித்த, என்னைப் பிடித்த ஒரு சில நட்புகள் போதும்.


          **********


          சமீபத்தில் ஒரு ஞாயிறன்று நண்பனொருவனின் கிரஹப்பிரவேசத்திற்காக நானும் என் இரு நண்பர்களும் சென்றிருந்தோம். எல்லோருடனான அரட்டையின்போதுதான், சில நாட்களாய் தொலைத்திருந்த நகைச்சுவையுணர்வை மீட்டெடுத்தது போன்று உணர்ந்தேன்.


          கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்குப் பின் சிலரை சந்தித்தேன். எப்போதும் தாமதமாக வந்தவன், இப்போதும் தாமதமாகத்தான் வருகிறான். வாய்ச்சவடாலில் (மட்டும்) வீரனாக இருந்தவன், தன் குணம் மாறாத நீலாம்பரியைப் போல் இன்னும் அப்படியேதானிருக்கிறான். அன்று சிம்ரனை காதலித்தவன் இன்று அனுஷ்காவை பூஜிக்கிறான். எல்லோரையும் பிடித்து கலாய்த்துக்கொண்டிருந்ததில் அந்த நாள் இனிய நாளாக அமைந்தது.


          இது போன்றதொரு சந்தர்ப்பம் அடிக்கடி (சனி, ஞாயிறுகளில்) கிடைக்கவேண்டும்.


          **********


          மே மாத சென்னை வெயில் பற்றி சொல்லவேண்டியதில்லை. சூரிய பகவான் தீயாய் வேலை செய்துகொண்டிருக்கிறார். இரு வாரங்களுக்கு முன் வழக்கமாக காலை சிற்றுண்டிக்குச் செல்லும் உணவகத்திற்குச் சென்றிருந்தேன். அன்று திரு.சூனா பனாவின் உக்கிரம் காலையிலேயே அதிகமாயிருந்தது. ஏதேனும் குளிர்பானம் அருந்தலாமென்றெண்ணி அங்கிருந்த ஒரு ஸ்ட்ராபெர்ரி ஃபேளேவரை வாங்கி குடித்தேன்.


          அந்த பாட்டிலில் MRP 15 என்று போட்டிருக்க, காசு வாங்கியவரோ 17 என்று பில் போட்டார்.


          "இதுல 15தான் போட்டிருக்கு, ஏன் பில்ல 17 போட்டிருக்கீங்க?"


          "17தாங்க"


          "இங்க பாருங்க, 15தான் போட்டிருக்கு". பாட்டிலைக் காட்டினேன்.


          "இதெல்லாம் நாங்க ஃபிக்ஸ் பண்றதுதான் சார், இது 17 ரூபா"


          அதற்கு மேல் அவரிடத்தில் விவாதம் செய்வதில் அர்த்தமில்லை எனத் தோன்றியது. இதில் கொடுமை என்னவென்றால், அங்கிருந்த ஒரு சிலரும், 2 ரூபாய்க்கு ஏன் அநாவசியமாக பேசுகிறான் என்பது போல் என்னை முறைத்துப் பார்த்தனர். நல்லாயிருங்கப்பு!


          இந்த பிரச்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் இருக்கிறது. எந்த பொருள் வாங்கினாலும் வெளியே விற்கும் விலையை விட அதிகமாகத்தான் இருக்கிறது. கேட்டால் மிக அலட்சியமான பதில்தான் கிடைக்கும்.


          நானொன்றும் அ ந் நி ய ன் அல்ல, இம்மாதிரி ஆட்களுக்கு, கபீம்குபாம் என்று எழுதிவிட்டு தண்டனை தர. என்னால் செய்ய முடிந்தது, எங்கெல்லாம் இம்மாதிரி அதிக விலை வைத்து விற்கிறார்களோ, அங்கெல்லாம் எந்த பொருளையும் வாங்குவதில்லை, முற்றிலும் தவிர்க்கிறேன். நம் நீதிமன்றங்களின் சுறுசுறுப்பை நினைத்தாலே, நுகர்வோர் நீதிமன்றத்திற்குச் செல்லவும் தயக்கமாயிருக்கிறது. இவர்களை வேறென்னதான் செய்ய?


          **********



          பெயர் குறித்த தொடர் பதிவிற்கு ப்ரியா அழைத்திருந்தார், பல நாஆஆஆஆஆட்களுக்கு முன்பு. ஸாரி ப்ரியா, பெட்டர் லேட் தேன் நெவர் இல்லையா?


          சிறுவயதில் என் பெயர் எனக்கு பிடிக்காது. ஸ்டைலிஷாக இல்லாமல் ஏதோ பழைய பெயர் வைத்துவிட்டார்கள் என்று கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. அதுவும் ஒரு பழைய கறுப்பு வெள்ளை படத்தில், நாயகி நாயகனை அப்போதுதான் தூங்கியெழுந்தது போன்ற toneல் ‘நாதா நாதாஎன்றழைக்க, ‘ரகுநாதன்என்னும் பெயர் மீது இன்னும் எரிச்சல் கூடியது.


          பள்ளி, கல்லூரி நாட்களில்....ஏன் இப்போது கூட என் பெயரில் பில் போடும்போது பலர், RAGUNATHAN என்றுதான் எழுதுவர். நான் RAGHUNATHAN. அவர்கள் விட்டுவிடுவது ஓரெழுத்துதான் என்றாலும் என்னமோ அது ஒரு பெரிய மனக்குறையாகவே தோன்றும். நல்லவேளை, மார்க் ஷீட், பாஸ்போர்ட் போன்றவற்றிலெல்லாம் இந்த பிரச்னை வரவில்லை.


          எனக்கு ரகு என்று அழைத்தால்தான் பிடிக்கும், அழைப்பவர்களைத்தான் பிடிக்கும். பெயரை சுருக்கி கூப்பிடுவதும், செல்லப்பெயர் வைத்துக் கூப்பிடுவதும்தான் நட்பின் நெருக்கத்தை அதிகரிக்கிறது என்பது என் எண்ணம்.


          இப்போது நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. கண்டிப்பாக ‘சுதாஎன்கிற பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கூட யோசித்திருக்கிறேன் (இப்போது அந்த ஆசை இல்லை). அப்பெண்ணுக்கு பாட வருகிறதோ இல்லையோ, ‘நான் சுதா ரகுநாதன் என்றாவது அறிமுகப்படுத்திக்கொள்ளலாம் இல்லையா? J



          Monday, March 07, 2011

          சாப்பாட்டு இராவணன்

          ஊரிலிருக்கும் வரை, வீட்டில் அம்மா செய்யும் டிஃபன் பட்டியலில் இடம்பெறுவது பெரும்பாலும் இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி & உப்புமா. இவைதான் ரொட்டேஷனில் வலம் வந்து கொண்டிருக்கும். சைட் டிஷ்ஷில் மட்டும் நிறைய வெரைட்டி இருக்கும்படி பார்த்துக்கொள்வார் அம்மா.

          இது தவிர வெளியே வேறொன்றும் ரசித்து சாப்பிட்டதில்லை. மூட் பொறுத்து பேக்கரியில் பப்ஸும், தள்ளுவண்டியில் சுண்டலும் துவம்சம் செய்யப்படும். தள்ளுவண்டியில் இருக்கும் சுண்ட ல், பேல்பூரி எல்லாம் சாப்பிட்டிருக்கிறீர்களா? பள்ளியிலிருந்து கல்லூரி நாட்கள் வரை, நான் மிகவும் ரசித்து சாப்பிட்டிருக்கிறேன். இப்போதெல்லாம் அப்போதிருந்த தரமும், சுவையும் மிகவும் குறைந்திருக்கிறது.

          உணவின் மீது அப்போதெல்லாம் அதிக ஆர்வம் இல்லாததால் அம்மா தப்பித்தார்கள். உப்பு சரியாக இருக்கிறதா என்று கூட கணிக்கத் தெரியாது. செய்வதை குறை சொல்லாமல் சாப்பிட்டிருக்கிறேன். இவையெல்லாம் ஊரிலிருக்கும்வரைதான்.


          சென்னை. பெருமளவில் என் உணவுப்பழக்கத்தில் மாற்றம் வந்தது சென்னை வந்தபின்புதான். வந்த புதிதில் எப்போது ஹோட்டல் சென்றாலும் அதே வீட்டு புத்திதான் முன் வந்து நின்றது. எப்போதும் இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்திதான்.

          பணியில் சேர்ந்த பின்பு, ’என்ன இது, சின்ன தோசையில ஏதோ வெங்காயம் தக்காளி அரிஞ்சு போட்ட மாதிரியிருக்கு’ என்று கிண்டல் செய்ததில் முறைத்து சொன்னாள் தோழியொருத்தி. இது பீட்ஸாடா! அதன்பின் அவ்வப்போது பீட்ஸா குடிசைக்குச் சென்று, விதம்விதமான பீட்ஸாக்களை உள்ளே தள்ளுவதில் மட்டும்தான் கவனம் இருந்தது.

          இப்படியே இருந்தால் எப்படி? அடுத்த கட்டத்திற்கு போகவேண்டாமா என்று யோசித்ததினால் வந்த மாற்றம். அதுமட்டுமின்றி பேச்சிலராயிருப்பதில் கிடைக்கும் சுதந்திரம்.

          அன்னையைப் பொறுத்தவரை
          நான் வெஜிட்டேரியன்
          சென்னையைப் பொறுத்தவரை
          நான்வெஜிட்டேரியன்

          அறிமுகமாயினர் அண்ணா நகர் அஞ்சப்பரும், வடபழனி பொன்னுசாமியும். பெரும்பாலும் எக் பிரியாணி அல்லது சிக்கன் பிரியாணி, ஒரு சிக்கன் சைட் டிஷ். இதுவரை எத்தனை கோழிகளின் பாவத்திற்கு ஆளாகியிருக்கிறேன் என்று தெரியவில்லை.

          வீட்டில் அனைவரும் வெஜ். சென்னை வந்தபின்புதான் நான் நான் வெஜ். எதற்காவது கோபப்பட்டு பேசினால், ’நான் வெஜ் சாப்பிடற இல்ல, மிருக குணம், அதான் இவ்ளோ கோவம் வருது’ என்று ஒரு யார்க்கர் வீசுவார்கள் வீட்டில். ’அப்போ எவன் நல்லவன்னு சொல்லுங்க, அவனை கொன்னு சாப்பிடறேன், நல்ல குணம் வரும்’ என்று வந்த யார்க்கரை சிக்ஸராக்குவதில் அலாதி சுகம் எனக்கு.

          நான் வெஜ் சாப்பிட ஆரம்பித்த சில நாட்களில் பெரிய வித்தியாசம் தெரிந்தது. பேண்ட் சைஸ். மிகுந்த யோசனைக்குப் பிறகு முடிவெடுத்தேன். பிழைத்தன சில கோழிகள்.



          வேளச்சேரியில் வசிப்பதில் இருக்கும் பெரிய செளகரியம், மாடி ரயிலும், இங்கு குவிந்து கிடக்கும் உணவகங்களும். அஞ்சப்பர், நளாஸ், காரைக்குடி, திண்டுக்கல் தலப்பாகட்டி, கலிங்கா கெபாப் கோர்ட், ஹாட் சிப்ஸ், திருவல்லிக்கேணி ரத்னா கேஃப், அடுப்பங்கரை, வேங்க்ஸ் கிச்சன், டோமினோஸ் பீட்ஸா, மெக்டோனால்ட்ஸ், கேஎஃப்சி, மேரிப்ரவுன், பேஸ்கின் ராபின்ஸ், ஸ்நோ பார்க் என சொல்லிக்கொண்டே போகலாம்.

          சமீப நாட்களில் சென்றதில், திண்டுக்கல் தலப்பாகட்டி (கவனிக்க: தலப்பாகட்டு அல்ல..தலப்பாகட்டி) ரொம்பவே பிடித்திருக்கிறது. சில உணவகங்களில் பிரியாணி சாப்பிட்டால் அடுத்த வேளை சாப்பிடமுடியாதபடி வயிறு கும்மென்றிருக்கும், ஏன்டா சாப்பிட்டோம் என்றெண்ணும் அளவிற்கு. ஆனால் இங்கு அந்த பிரச்னை துளிகூட இல்லை. தரமான அரிசி பயன்படுத்துகிறார்கள். அற்புதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஆம்பியன்ஸில் குறையொன்றுமில்லை. நண்பர்களோடு, குடும்பத்தினரோடு சென்று அரட்டையடித்துக்கொண்டு சாப்பிட சரியான இடம்.

          இன்னொன்று. வேங்க்ஸ் கிச்சன். இங்கு ஒருவருக்கு ஆர்டர் செய்தாலே இரண்டூ பேர் உண்ணும் அளவிற்கு இருக்கிறது குவாண்டிட்டி. அவர்களுடைய ஃப்ரைட் ஐஸ்க்ரீமிற்காகவே இன்னொரு முறை போகவேண்டும்.....ம்ம்ம்ம்!

          க்ரிக்கெட் பார்ப்பதற்கு அடுத்து, இது போன்று விதவிதமான உணவு வகைகளை சுவைத்து பார்ப்பதில்தான் இப்போதெல்லாம் எனக்கு ஆர்வம் பொங்குகிறது. அடுத்தது மெக்ஸிகன் உணவு வகைகளை முயற்சி செய்து பார்க்க ஆசை. தற்போது சென்னையில் நல்லதொரு மெக்ஸிகன் ரெஸ்டாரண்ட்டைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

          என்னதான் பலவிதமாய் சாப்பிட்டாலும், உடல் நலமில்லாதபோது, இது கிடைக்காதா என மிகவும் ஏங்குவது ஒன்றே ஒன்றுதான். ஊரிலிருக்கும்போது அம்மா செய்து தரும் ரசம் சாதம்.


          Tuesday, February 22, 2011

          இர‌வினில் ஆட்ட‌ம்

          வாழ்க்கையில் ஒருமுறை கூட‌ எந்த‌ தேர்வுக்காக‌வும் இர‌வில் க‌ண் விழித்து ப‌டித்த‌தில்லை. தூக்க‌ம் முக்கிய‌மா, தூக்க‌த்தை கெடுத்துக்கொண்டு ப‌டிப்ப‌து முக்கிய‌மா என்கிற‌ கேள்வி எழும்போது உட‌ல் ந‌ல‌த்திற்கே அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் அளித்திருக்கிறேன். அதும‌ட்டும‌ல்லாம‌ல், க‌டைசி நேர‌த்தில் ப‌டித்து ஒன்றும் கிழித்துவிட‌ப்போவ‌தில்லை என்கிற‌ ம‌ன‌உறுதியும், இப்ப‌டி க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ப‌டித்து நாம‌ என்ன‌ ஸ்டேட் ஃப‌ர்ஸ்ட்டா வாங்கிட‌ப்போறோம் என்கிற‌ அசைக்க‌ முடியாத‌ த‌ன்ன‌ம்பிக்கையும் முக்கிய‌ கார‌ண‌ம். ஒன்றிர‌ண்டு முறை விடிய‌ற்காலை நாலு ம‌ணிய‌ள‌வில் எழுந்து ப‌டித்த‌தோடு ச‌ரி.

          க‌ல்லூரியில் இள‌நிலை இறுதியாண்டு ப‌டித்துக்கொண்டிருக்கும்போது, எங்க‌ள் க‌ணிணி பிரிவு த‌லைவ‌ரிட‌ம், 'நைட் லேப்' கேட்டு வாங்குவோம். காலையில் இருந்து வ‌குப்பில் ப‌டித்த‌து போக‌, இர‌விலும் க‌ண் விழித்து 'நைட் லேப்' கேட்ப‌து 'ப்ரொக்ராம்ஸ்' ப்ராக்டிஸ் செய்ய‌ அல்ல‌. 'நைட் லேப்'பிற்கு வ‌ந்தால் ம‌றுநாள் க‌ல்லூரி செல்ல‌வேண்டிய‌தில்லை. என‌வே பெரும்பாலும் எப்போதெல்லாம் க்ரிக்கெட் மேட்ச் இருக்கிற‌தோ அத‌ற்கு முன் நாள் எப்ப‌டியாவ‌து 'நைட் லேப்' வாங்கிவிடுவோம்.

          அப்போதும் இர‌வு முழுக்க‌ க‌ண் விழித்து க‌ணிணித் திரையை உற்று நோக்கிக் கொண்டிருக்க‌மாட்டேன். 'நைட் லேப்' இன்சார்ஜாக‌ யாராவ‌து ஒரு லெக்ச‌ர‌ர் இருப்பார். இர‌வு 11 அல்ல‌து 11:30 ம‌ணிய‌ள‌வில் அவ‌ரும் தூங்கிவிடுவார். அவ‌ர் தூங்கிய‌வுட‌ன், வெளியே நிறுத்திவைக்க‌ப்ப‌ட்டிருக்கும் எங்க‌ள் க‌ல்லூரிப் பேருந்திற்குள் ந‌ண்ப‌ர்க‌ள் படையெடுப்போம். ஒவ்வொருவ‌ருக்கும் ஒவ்வொரு இருக்கையும், அந்த‌ இர‌வில் ப‌டுக்கையாகிவிடும். பின்னே? இர‌வு முழுக்க‌ க‌ண் விழித்திருந்தால் ம‌றுநாள் எப்படி மேட்ச் பார்ப்ப‌து?

          ப‌டிப்புக்கென்று உட‌லை வ‌ருத்தி இர‌வில் க‌ண் விழித்த‌து இவ்வ‌ள‌வுதான். ஆனால் ப‌டிக்கும்போது சுல‌ப‌மாக‌ த‌விர்க்க‌முடிந்த‌து வேலை கிடைத்த‌போது த‌விர்க்க‌ இய‌ல‌வில்லை. ச‌ரியாக‌ நினைவில்லை, வேலை கிடைத்து ஒரு வார‌மோ, ப‌த்து நாளோ 'ட்ரெயினிங்'கில் இருந்தேன். ட்ரெயினிங் முடிந்த‌வுட‌ன் முத‌லிலேயே ஒரு புய‌ல் ப்ள‌ஸ் பூக‌ம்ப‌ம்...அடுத்த‌ ஒரு மாத‌ம் நைட் ஷிஃப்ட்!



          அய்ய‌கோ! என்ன‌ கொடுமை? பொதுத் தேர்வுக‌ளுக்கோ, ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த் தேர்வுக‌ளுக்கோ கூட‌ அச‌ராத‌வ‌ன், இப்போது பொருளீட்டும் நிமித்த‌ம் இர‌வில் க‌ண் விழிக்க‌ வேண்டியிருக்கின்ற‌தே! இதை கேட்க‌ யாருமில்லையா? க‌ட‌வுளுக்கென்ன‌ க‌ண்ணில் அறுவை சிகிச்சையா ந‌ட‌ந்து கொண்டிருக்கின்ற‌து? வேறு வ‌ழியில்லை, 'ஸ்கூபி டூ' வேஷ‌ம் போட்டாகிவிட்ட‌து, குரைத்துதான் ஆகவேண்டும்.

          இர‌வு எட்ட‌ரை ம‌ணிக்கு ஷிஃப்ட் ஆர‌ம்பிக்கும். ப‌த்து ம‌ணிக்கு மேல்தான் அலுவ‌ல‌க‌த்தில் இர‌வு உண‌வு வ‌ரும். இர‌வில் எட்டு அல்ல‌து எட்ட‌ரை ம‌ணிக்கே சாப்பிடும் ப‌ழ‌க்க‌ம் உள்ள‌வ‌ன் நான். மாலை சாப்பிட்டுவிட்டு அலுவ‌ல‌க‌ம் வ‌ந்தால், இர‌வு சீக்கிர‌ம் ப‌சிக்காது. ப‌தினொரு ம‌ணிக்கு மேல்தான் சாப்பிட‌ முடியும். அத‌னால் மாலையில் ஏதேனும் ஒரு ப‌ழ‌ச்சாறு அல்ல‌து காபி. அவ்வ‌ள‌வுதான்.

          ப‌தினொரு ம‌ணிக்கு மேல் சாப்பிட‌ப்போவ‌தில் இன்னொரு பிர‌ச்னை. சாப்பாடு சூடாக‌ இருக்காது. அந்த‌ நேர‌த்தில் ஆறிப்போய் ச‌ப்பென்ற‌ சாப்பாட்டை சாப்பிடுவ‌து மிக‌க் கொடுமை. [ ஏனோ இந்த‌ வ‌ரியை த‌ட்ட‌ச்சும்போது, எப்போதேனும் மின்ம‌ட‌லில் வ‌ரும், ப‌சியில் வாடும் உகாண்டா நாட்டு குழ‌ந்தைக‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ள் நினைவுக்கு வ‌ருகிற‌து :( ]




          இர‌வு உண‌வென்றால் ஏதோ இட்லி, தோசை போன்ற‌வை அல்ல‌. இர‌ண்டு ச‌‌ப்பாத்தி அல்ல‌து ப‌ரோட்டா குருமா, சாம்பார் சாத‌ம், ர‌ச‌ம், மோர், ஏதேனும் கூட்டு அல்ல‌து பொரிய‌ல், அப்ப‌ள‌ம், ஊறுகாய், ஒரு ஸ்வீட் அல்ல‌து வாழைப்ப‌ழ‌ம். ம‌திய‌ உண‌வு எப்ப‌டியிருக்குமோ அத‌ற்கு ச‌ற்றும் குறைந்த‌த‌ல்ல‌ இர‌வு உண‌வு. என‌வே நானும் ந‌ண்ப‌ரும் ப‌த்து ம‌ணிக்கே உண‌வ‌ருந்தும் இட‌த்தில் ஆஜ‌ராகி விடுவோம். ம‌திய‌ம் சாப்பிடுவ‌தைப் போல‌ க‌ட்டு க‌ட்டென்று க‌ட்டிவிட்டு, ஃப்ளோருக்கு போய் உட்கார்ந்தால், தூக்க‌ம் கும்மென்று வ‌ரும்

          வேலைக்குச் சேர்ந்த‌ புதிதென்ப‌தால், பெரிய‌ த‌லைக‌ள் யாராவ‌து பார்த்து தொலைப்பார்க‌ளோ என்ற‌ ப‌ய‌த்திலேயே, தூங்க‌ முடியாம‌ல் மிகுந்த‌ அவ‌ஸ்தையில் அந்த‌ இர‌வுக‌ள் செல்லும். ந‌ம்பினால் ந‌ம்புங்க‌ள், உட‌ன் வேலை செய்த‌ சில‌ர் மேற்க‌த்திய‌ க‌ழிவ‌றைக‌ளில் போய் சிறிது நேர‌ம் தூங்கிவிட்டு வ‌ந்த‌தும் அர‌ங்கேறிய‌து.

          இதோ..சில‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து..இன்று, ப்ராஜ‌க்ட் டெட்லைன், க்ளைய‌ண்ட்டுக்கு ச‌ப்போர்ட் கொடுக்க‌வேண்டும், அவ‌ர்க‌ள் அனுப்பும் மின்ம‌ட‌லுக்கு ப‌தில‌ளிக்க‌வேண்டும்..இன்னும் என்ன‌வெல்லாமோ சொல்லி, சில‌ நாட்க‌ள் இர‌வில் க‌ண் விழித்து வேலை செய்ய‌வேண்டிய‌ நிலை. ஆனால் வேலைக்குச் சேர்ந்த‌ புதிதில் இருந்த‌ நைட் ஷிஃப்ட் மீதான‌ வெறுப்பு இப்போது இல்லை.

          ப‌க‌லில் இல்லாத‌ அமைதி இர‌வில் ம‌ட்டுமெ கிடைக்கிற‌து. ப்ள‌ஸ் ப‌க‌லில் இல்லாத‌ மைண்ட் ஃப்ரெஷ்ன‌ஸ்ஸும், 'ராஜா கோ ராணி ஸே ப்யார் ஹோக‌யா' என்று மெல்லிய‌ ஓசையில் ம‌ன‌ம் வ‌ருடும் ப‌ழைய‌ ஹிந்தி பாட‌லைக் கேட்டுக்கொண்டே வேலையைப் பார்க்கும் சுத‌ந்திர‌மும் நைட் ஷிஃப்ட்டில் ம‌ட்டுமே சாத்திய‌ம். சில‌ நேர‌ம், இர‌வில் ப‌ணிபுரிவ‌துதான் ஏ.ஆர்.ர‌ஹ்மானின் வெற்றிக்கு முக்கிய‌ கார‌ண‌மோ என்று கூட‌ யோசித்திருக்கிறேன்.

          நைட் ஷிஃப்ட் முடிந்து காலை தூங்க‌ப்போகும் முன்.....வேள‌ச்சேரியில் உடுப்பி போளி ஸ்டாலில், பொங்க‌ல் (நெய் வாச‌ம் கும்மென்றிருக்கும்:)) சாப்பிட்டு ப‌டுத்தால்...இட்ஸ் டிவைன்! நெய் பொங்க‌ல் சாப்பிட்டு ப‌டுப்ப‌து இர‌ண்டு தூக்க‌ மாத்திரை போட்ட‌ எஃபெக்ட்டை த‌ரும். சாப்பிட்டு காலை ஏழு ம‌ணிக்கு ப‌டுத்தால் கிட்ட‌தட்ட‌ மாலை மூன்று அல்ல‌து நான்கு ம‌ணி வ‌ரையிலான‌ தூக்க‌ம் ச‌ர்வ‌ நிச்ச‌ய‌ம்.

          ப‌க‌லில் ந‌ன்றாக‌ தூங்காவிட்டால், அன்றைய‌ இர‌வு மிக‌க் கொடுமையாக இருக்கும். சிறிது நேர‌ம் வேலை செய்துவிட்டு தூங்கிக்கொள்ள‌லாம் என்று நினைத்தால் அன்றுதான் க்ளைய‌ண்ட்டிட‌மிருந்து நூத்தியெட்டு மெய்ல்க‌ளும், ஆயிர‌த்தெட்டு கேள்விக‌ளும் குவிந்து த‌ள்ளும். ப‌ல‌ முறை ப‌க‌லில் ச‌ரியாக‌ தூங்காத‌தினால் ஏகப்ப‌ட்ட‌ அவ‌ஸ்தைப‌ட்டிருக்கிறேன். நைட் ஷிஃப்ட் செய்வோருக்கு நான் கூற‌ விரும்புவ‌து, ஒரு வேளை உண‌வு இல்லாவிட்டால் கூட‌ ப‌ர‌வாயில்லை, ஆனால் தூக்க‌த்தை ம‌ட்டும் த‌விர்க்காதீர்க‌ள்.

          சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் சிவாஜி ந‌டித்த‌ ந‌வ‌ராத்திரி பட‌த்தை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் திருடனாக‌ வ‌ரும்போது ஒரு பாட‌லைப் பாடுவார். என‌க்கென்ன‌வோ அப்பாட‌லின் ஆர‌ம்ப வ‌ரிக‌ள் நைட் ஷிஃப்ட்டில் வேலை செய்வோருக்குக் கூட‌ பொருந்தும் என்றே தோன்றிய‌து.

          இர‌வினில் ஆட்ட‌ம்

          ப‌க‌லினில் தூக்க‌ம்

          இதுதான்

          எங்க‌ள் உல‌க‌ம்

          எங்க‌ள் உல‌க‌ம்....




          Sunday, February 06, 2011

          வீட்டை விட்டு வெளியேறுகிறேன்

          இது நானாக‌ எடுத்த‌ முடிவு அல்ல‌. முற்றிலும் என் மீது திணிக்க‌ப்ப‌ட்ட‌ முடிவு. இதைத் த‌விர‌ வேறு வ‌ழியில்லை.

          ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் ஆலோசித்திருக்க‌லாம்தான். ஆனால் இதில் அவ‌ர்க‌ள் என்ன‌ செய்துவிட‌ முடியும்? ந‌ம்பிக்கை இல்லாவிட்டாலும் சில‌ நேர‌ம் விதிப்ப‌டி ந‌ட‌க்கிற‌து என்றுதான் ச‌மாதான‌ப்ப‌டுத்திக்கொள்ள‌ தோன்றுகிற‌து.

          எந்த‌வொரு நிலையிலும் இப்ப‌டிப்ப‌ட்ட‌ முடிவை எடுக்க‌வேண்டும் என்று நான் நினைத்த‌தில்லை. ஆனால் என்னிட‌ம் இதைத்தான் எதிர்பார்க்கிறார்க‌ள் என்றால் வேறென்ன‌ செய்வ‌து? அப்ப‌டி என்ன‌ த‌வ‌று செய்துவிட்டேன்?


          இவ்வ‌ள‌வு வ‌ருட‌ங்க‌ளில் அவ‌ர்க‌ள் ம‌ன‌ம் புண்ப‌டும்ப‌டி ந‌ட‌ந்த‌தில்லை. சிற்சில‌ அபிப்ராய‌ பேத‌ங்க‌ள், வ‌ருத்த‌ங்க‌ள் இருந்திருக்க‌‌லாம். ஆனால் அவ‌ர்க‌ள் மேலிருந்த‌ அன்பு, ம‌ரியாதை எதிலும் குறை வைத்த‌தில்லை. இன்னும் அந்த‌ உண‌ர்வுக‌ள் அப்ப‌டியேதான் இருக்கின்ற‌ன‌. நான் க‌ஷ்ட‌ப்ப‌ட்ட‌ கால‌த்தில், ப‌க்க‌ப‌ல‌மாக‌ இருந்து அவ‌ர்க‌ள் அளித்த‌ ஆத‌ர‌வு... அதை என்றென்றும் ம‌ற‌வேன்.

          இத‌ன் மூல‌ம் நான் க‌ற்றுக்கொண்ட‌து. உற‌வுக‌ள், ந‌ண்ப‌ர்க‌ள், இருப்பிட‌ங்க‌ள், அலுவ‌ல‌க‌ம் என்று யாராக‌ இருப்பினும், எதுவாக‌ இருப்பினும், அன்பு, பாச‌ம் என்ப‌து ஓர‌ள‌வோடு இருப்ப‌து உத்த‌ம‌ம். பிரிவு ஏற்ப‌டும்போது வ‌ரும் வ‌லியைத் தாங்க‌க்கூடிய‌ ம‌ன‌து வேண்டும். அதிலும் குறிப்பாக‌, ந‌ம் மீது த‌வ‌றில்லாத‌போதும், இழைக்க‌ப்ப‌டும் த‌ண்ட‌னை மிக‌க் கொடிய‌து. சாலையின் ம‌த்தியில் நின்றுகொண்டு என்னை புரிந்துகொள்ள‌ யாருமில்லையா என்று க‌த்த‌வேண்டும் போலிருந்த‌து.

          அன்று அவ‌ர் சொன்ன‌ வார்த்தைக‌ள் என்றும் ம‌ற‌க்க‌முடியாத‌து.

          I didn't want to do this to you, but I have to...

          எளிதாக‌ சொல்லிவிட்டேன்.

          Ok, no problem, it's your decision

          ஈகோ. உங்க‌ளுக்கு இவ்ளோன்னா என‌க்கு எவ்ளோ இருக்கும் என்ற‌ ஈகோ. என‌வே திமிரில் நோ ப்ராப்ள‌ம் என்று சொல்லிவிட்டாலும் பின்புதான் ச‌ற்று க‌வ‌லைப்ப‌ட‌ ஆர‌ம்பித்தேன். வாழ்க்கை அவ்வ‌ள‌வு எளிதா என்ன‌? வீட்டை விட்டு வெளியேறிவிட்டால் இப்போதிருக்கும் வாழ்க்கை, வ‌ச‌தி இதெல்லாம் கிடைக்குமா?

          ச்சீ! அவ‌ர் வெளிப்ப‌டையாக‌ அவ‌ர் க‌ருத்தை சொல்லிவிட்டார், இத‌ற்கு மேலும் த‌ன்மான‌ம் இழந்து அவ‌ரை ச‌மாதான‌ப்ப‌டுத்தி, அவ‌ர் காலில் விழுந்து இங்கேயே இருக்கலாமா என்று நினைக்கிறாயே, வெட்க‌மாயில்லை? போடா என்று என் க‌ழுத்தை நானே பிடித்து வெளியே த‌ள்ளினேன். இந்த‌ மன‌து இருக்கிற‌தே, அத‌ற்கு எந்த‌ நேர‌த்தில் என்ன‌ யோசிப்ப‌து என்ற‌ விவ‌ஸ்தையே இல்லை. பின் என்ன‌? இப்ப‌டி வெளியேறும்போதா "வாழ்க்கையில் ஆயிர‌ம் த‌டைக்க‌ல்ல‌ப்பா, த‌டைக்க‌ல்லும் உன‌க்கொரு ப‌டிக்க‌ல்ல‌ப்பா" என்று யாரேனும் பாட‌மாட்டார்க‌ளா என்று எதிர்பார்ப்ப‌து? இடிய‌ட் இடிய‌ட்...

          வெளியேறிய‌ பின் எங்கு த‌ங்குவ‌து? அது ஒரு பெரிய‌ அவ‌ஸ்தை. இப்போதெல்லாம் எங்கும் 'டுலெட்' போர்டை தூக்கில் தொங்க‌விடுவ‌தில்லை. எல்லாவ‌ற்றையும் வீட்டு த‌ர‌க‌ர்க‌ள் பார்த்துக்கொள்கிறார்க‌ள். வீட்டு உரிமையாள‌ர் 5000 ரூபாய்க்கு கொடுக்க‌லாம் என்று நினைத்திருந்தாலும், 'என்ன‌ங்க‌ நீங்க‌, இந்த‌ வீட்டுக்கு 6000க்கு தாராள‌மா வ‌ருவாங்க‌' என்று அவ‌ரை உசுப்பேற்றும் ப‌ணியில் சால‌ச் சிற‌ந்த‌வ‌ர்க‌ளாக‌ இருக்கிறார்க‌ள். '7000 சொல்றார், நான் பேசி 6500க்கு கொண்டு வ‌ந்திருக்கேன்' என்று ந‌ம்மிட‌ம் சொல்லி ந‌ல்ல‌ பெய‌ர் வாங்குவ‌திலும் அலாதி சுக‌ம் அவ‌ர்களுக்கு.

          இர‌ண்டு வார‌ம் அலைந்து திரிந்த‌தில் ஒரு வீடு கிடைத்த‌து. சில‌ நேர‌ம் (ம‌ட்டும்) க‌ர்வ‌ம் கொள்ள‌த் தோன்றுகிற‌து. த‌லை நிமிர்ந்து, அவ‌ரிட‌ம் போய் சொல்ல‌வேண்டும் என்று முடிவு செய்தேன்.

          ஒன் ஃபைன் மார்னிங். செய்தித்தாளில் மூழ்கியிருந்தார். முன் சென்று நின்றேன். 'என்ன‌?' என்ப‌து போல‌ பார்த்தார்.

          "வேற வீடு பார்த்திருக்கேன். இந்த‌ வார‌ம் புத‌ன் கிழ‌மை கிள‌ம்ப‌றேன்"

          இவ்வ‌ள‌வு சீக்கிர‌ம் என்னிட‌மிருந்து இந்த‌ வார்த்தைக‌ளை அவ‌ர் எதிர்பார்க்க‌வில்லை என்ப‌து அவ‌ர் பார்வையிலேயே தெரிந்த‌து. எங்க‌ளுக்குள்ளான‌ ஈகோ யுத்த‌த்தில் அவ‌ரும் ச‌ற்றும் ச‌ளைத்த‌வ‌ரில்லை. என‌வே இந்த‌ அதிர்ச்சியை வெளிக்காட்டாம‌ல் இருப்ப‌த‌ற்கு த‌ன்னால் இய‌ன்ற‌வ‌ரை சிற‌ப்பாக‌வே ந‌டிக்க‌ முய‌ற்சி செய்தார். தொண்டையை செருமிக்கொண்டு பேச‌ ஆர‌ம்பித்தார்.

          "ஆக்சுவ‌லா முத‌ல்ல‌ ஃபேமிலிக்குதான் விட‌ற‌தாதான் இருந்தோம். இப்போ ஏதாவ‌து ஆஃபிஸ்க்கு கொடுக்க‌ற‌தா இருக்கோம். ஃபேமிலியா இருந்தாதான் கேட் யார் லாக் ப‌ண்ற‌துங்க‌ற‌துல‌ பிர‌ச்னை இருக்கும். ஆஃபிஸ்னா பிர‌ச்னை இல்ல‌, நீங்க‌ க‌ன்டினியூ ப‌ண்ற‌தா இருந்தா ப‌ண்ண‌லாம்" என்றார் வீட்டு உரிமை‌யாள‌ர்.

          "இல்ல‌, ப‌ர‌வாயில்ல‌ அங்கிள்" என்றேன்.

          Sunday, January 16, 2011

          ச‌ச்சினுக்காக‌

          வேலை கிடைத்து சென்னை வ‌ந்த‌ ச‌ம‌ய‌ம். அவ‌ச‌ர‌வ‌ச‌ர‌மாக‌ தேடிய‌தில் வேள‌ச்சேரியில் வாட‌கைகு வீடு கிடைத்த‌து. வீடென்று சொல்ல‌ முடியாது. மொட்டை மாடியில் ஒரு அறை. அவ்வ‌ள‌வே.

          ச‌ரி பேச்சில‌ர்தானே, ந‌ம‌க்கு இதை விட‌ வேறென்ன‌ வேண்டும் என்று ச‌ற்றே த‌ன்னிறைவு அடைந்தேன். ப‌க்குவ‌ப்ப‌ட்ட‌ ம‌ன‌நிலையில் இருக்கிறோமா என்று கூட‌ தோன்றிய‌து. ப்ச்..அதெல்லாம் இல்லை. வேற‌ வ‌ழி? ந‌ம்மை நாமே ச‌மாதான‌ப்ப‌டுத்திக்கொள்ள‌ வேண்டிய‌துதான்.

          அறையில் இருந்த‌ பெரிய‌ குறை. ஒரு தொலைக்காட்சி வைத்துக்கொள்ள‌ ச‌ரியான‌ மின் இணைப்பு வ‌ச‌தியில்லாத‌து. அவ‌னுக்கு சாப்பாடு கூட‌ வேண்டாம், டிவி இருந்தா போதும் என்று வீட்டில் ஏள‌ன‌ம் செய்வார்க‌ள். அந்த‌ள‌வுக்கு தொலைக்காட்சிக்கு அடிமையாய் இருந்தேன். இப்ப‌டியிருந்த‌வ‌ன் திடீரென்று தொலைக்காட்சி இல்லாம‌ல் வாழ‌வேண்டுமென்றால் என்ன‌ செய்வ‌து?

          இந்த‌ ச‌ம‌ய‌த்தில்தான் உற்ற‌ தோழ‌ர்க‌ளாயின‌ர் ரேடியோ மிர்ச்சியும், கிழ‌க்கு ப‌திப்ப‌க‌ புத்த‌க‌ங்க‌ளும். தொலைக்காட்சி இல்லாத‌ குறையை இவ‌ர்க‌ள் நிறைவு செய்த‌ன‌ர். வார‌யிறுதியில் ஊருக்கு போகும்போது பார்க்க‌லாம்தான். அந்த‌ இர‌ண்டு நாட்க‌ள் பார்த்தால், வார‌ நாட்க‌ளில் பார்க்காம‌ல் இருக்கும்போது அந்த‌ க‌வ‌லை இன்னும் அதிக‌ரிக்கும். என‌வே வார‌யிறுதியில் தொலைக்காட்சி பார்ப்ப‌தையும் த‌விர்க்க‌த் தொட‌ங்கினேன். ந‌ம்புவ‌து க‌டின‌ம், ஆனால் உண்மை. முழுதாக‌ ஒரு ம‌ணி நேர‌ம் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்து கிட்ட‌த‌ட்ட‌ ஐந்து வ‌ருட‌ங்க‌ள் மேல் ஆகிற‌து.

          இந்த‌ ஜோடி ந‌ம்ப‌ர் ஒன், சூப்ப‌ர் சிங்க‌ர், மானாட‌ ம‌யிலாட‌, க‌லா மாஸ்ட‌ர், கெமிஸ்ட்ரி, ந‌மீதா, குஷ்பு என‌ ப‌ல‌ர் வாயிலாக‌ அறிந்த‌தோடு ச‌ரி. சின்ன ப‌ச‌ங்க‌ என்ன‌மா பாடுறாங்க‌ பாரு என்று சொன்ன‌தால் ஒரே ஒரு முறை சூப்ப‌ர் சிங்க‌ர் நிக‌ழ்ச்சியை இருப‌து நிமிட‌ங்க‌ள் பார்த்தேன். ந‌டுவ‌ராக‌ இருந்த‌வ‌ர், நீ இப்ப‌டி பாட‌ணும், அப்ப‌டி பாட‌ணும் என்று அந்த‌ச் சிறுமியை ஆயிர‌த்தெட்டு குறைக‌ள் சொல்ல‌, அவ‌ருடைய‌ ச‌ட்டையைப் பிடித்து ப‌ளாரென‌ அறைய‌ வேண்டும் போலிருந்த‌து என‌க்கு.

          பெற்றோரைச் சொல்ல‌ வேண்டும். குழ‌ந்தைக‌ளை குழ‌ந்தைக‌ளாக‌ வ‌ள‌ர‌விடாம‌ல் த‌ங்க‌ளுடைய‌ ஆசைக‌ளைத் திணித்து, கு.த‌.ப‌ன‌ங்காய்தான். இந்நிக‌ழ்ச்சிக‌ள் குழ‌ந்தைக‌ளின் திற‌மையை வெளிப்ப‌டுகிற‌துதான். ஒத்துக்கொள்கிறேன். ஆனால் போட்டியில் தோல்வியுறும் குழ‌ந்தைக‌ளின் ம‌ன‌நிலை? அர‌ங்கில் அவ்வ‌ள‌வு பேர் ம‌த்தியில் ந‌டுவ‌ர்க‌ளின் சுரீர் விம‌ர்ச‌ன‌ங்க‌ள், போட்டியில் தோல்வி...ப்ச், ஊரே கொண்டாட‌ட்டும். ஐ ஹேட் சூப்ப‌ர் சிங்க‌ர்!



          இத‌னாலேயே தொலைக்காட்சி பார்க்காத‌து கொஞ்ச‌ம் நிம்ம‌தியாக‌வே இருந்த‌து. இருந்தாலும் சில‌ ச‌ம‌ய‌ம் க்ரிக்கெட்டில் ப‌ல‌ ந‌ல்ல‌ போட்டிக‌ளை பார்க்க‌முடியாத‌போது ம‌ட்டும் வெறுப்பாக‌ இருக்கும். குறிப்பாக‌ ச‌ச்சின் ச‌த‌ம் அடித்து இந்தியா வெற்றி பெறும்போது, இந்தியா ஆஸ்ட்ரேலியா தொட‌ர் ம‌ற்றும் ஆஷ‌ஸ் தொட‌ர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான‌ ஒரு நாள் போட்டியில் ச‌ச்சின் 200 அடித்த‌து கூட‌ க்ரிக்இன்ஃபோ மூல‌மாக‌த்தான் தெரிந்துகொண்டேன். ஒரு டிவி இல்லையே என‌ மிகுந்த‌ வ‌லியுட‌ன் ம‌ன‌ம் புழுங்கிய‌து அன்றுதான்.



          அடுத்த‌ மாத‌ம் 2011 உல‌க‌க் கோப்பை ஆர‌ம்பிக்க‌ப்போகிற‌து. ச‌ச்சின் ப‌ங்கேற்க‌ப்போகும் க‌டைசி(?!) உல‌க‌க் கோப்பைத் தொட‌ர். ச‌ச்சின் ப‌ங்கேற்க‌ப்போகும் ஒவ்வொரு போட்டியும், இழ‌க்க‌வே கூடாத‌ பொன்னான‌ த‌ருண‌ங்க‌ள். குறைந்த‌ப‌ட்ச‌ம் ஹைலைட்ஸையேனும் பார்த்தாக‌ வேண்டும். பார்க்க‌த் த‌வ‌ற‌விட்டு மீண்டும் ம‌ன‌ம் புழுங்கிக்கொண்டிருப்ப‌தில் பிர‌யோஜ‌ன‌மில்லை. அது இதுவென‌ ஆயிர‌ம் முறை யோசித்து, க‌டைசியில் போகி தின‌த்த‌ன்று ஒரு டிவி வாங்கியாகிவிட்ட‌து, ச‌ச்சினுக்காக‌. ச‌ச்சினுக்காக‌வே :)

          டீடிஎச்சில் டிஷ்டிவி பெட்ட‌ர் என்று தோன்றுகிற‌து. இல்லையெனில் டாடா ஸ்கை. எனி ச‌ஜ‌ஷ‌ன்ஸ்?

          த‌ற்போ‌து இரு வேண்டுத‌ல்க‌ள்

          #ச‌ச்சினுக்காக‌வாவ‌து ம‌ற்ற‌ ப‌த்து வீர‌ர்க‌ளும் ஒழுங்காக‌ விளையாடி உல‌க‌க்கோப்பையை வெல்ல‌ வேண்டும்.

          #இறைவா, ரியாலிட்டி ஷோக்க‌ளிட‌மிருந்து என்னை காப்பாற்று, க்ரிக்கெட்டை நான் பார்த்துக்கொள்கிறேன் :)