சில காட்சிகளில் வரும் அநாகரிகமான வார்த்தைகளை மட்டும் தவிர்த்திருக்கலாம். வெறும் உதட்டசைவாக இருந்தாலும் எளிதாக கண்டுபிடிக்கமுடிந்தது.
EXAM
உணர்வுபூர்வமாக பல படங்களை பார்த்திருக்கிறோம். இது முழுக்க முழுக்க அறிவுபூர்வமான படம். படம் பார்ப்பவர்களின் இன்டெலிஜென்ஸுக்கு கண்டிப்பாக இந்த படம் ஒரு சவால்தான்.
ஒரு நிறுவனத்தில் சிஇஓவின் பிஏ பணிக்கான கடைசி கட்ட தேர்வு. எட்டு பேர் போட்டியாளர்கள். அதில் ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார். எட்டு பேரும் ஒரு அறையில் அமரவைக்கப்படுகின்றனர். தேர்விற்கான நேரம் மொத்தம் 80௦ நிமிடங்கள். தேர்வு அறையினுள் வரும் அந்த அலுவலகத்தை சேர்ந்த ஒருவர் இந்த தேர்வின் விதிமுறைகளை சொல்கிறார்.
1. அவரிடமோ அல்லது அங்கு நிற்கும் செக்யூரிட்டியிடமோ யாரும் பேசக்கூடாது
2. விடைத்தாளுக்கு எந்த சேதமும் ஏற்படக்கூடாது
3. எந்த காரணத்திற்காகவும் தேர்வு நேரம் முடியும் முன் யாரும் வெளியே போகக்கூடாது
இந்த விதிகளை மீறுபவர்கள் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்படுவர். இவற்றை எல்லாம் சொல்லிவிட்டு அவர் சென்றுவிட, போட்டியாளர்கள் தேர்வுக்கு தயாராகின்றனர். தாளை திறந்தவுடன் அவர்களுக்கு அதிர்ச்சி. அதில் கேள்வியே இல்லை. கேள்வியே இல்லாமல் என்ன பதில் எழுதுவது?........இதற்கு மேல், கேள்வி என்ன, யார் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
ROCKSTAR
டெல்லியில் இருக்கும் ஒரு சாதாரண இளைஞன் எப்படி ஒரு ராக்ஸ்டாராக மாறுகிறான் என்பதே கதை. மனதில் வலி இருந்தால்தான் பெரிய அளவில் சாதிக்க முடியும் என்று ஒருவர் கூற, அதற்கு காதல்தான் சரியான வழி என முடிவு செய்து நர்கிஸ் உடன் பழக ஆரம்பிக்கிறார் ரன்பீர். பழகிய சில நாட்களில் நர்கிஸ் திருமணமாகி Pragueக்கு சென்றுவிட, அதன்பின் அவரை மறக்க முடியாமல் தவித்தாலும், இசையில் கொஞ்சம் கொஞ்சமாக ரன்பீருக்கு புகழ் கிடைக்க ஆரம்பிக்கிறது.
Pragueல் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பு ரன்பீருக்கு கிடைக்க, அதை பயன்படுத்தி நர்கிஸை மீண்டும் சந்திக்கிறார். அதன் பின் அவர்கள் வாழ்கையில் பல மாற்றங்கள். அதையெல்லாம் படம் பா.தெ.கொ.
இரண்டாம் பாதியில் கொஞ்சம் திரைக்கதையில் தொய்வு ஏற்படுவது போன்று தோன்றினாலும் ரன்பீர் கபூரின் நடிப்பு அதையெல்லாம் தாண்டி மனதில் நின்றது படத்திற்கு பெரிய ப்ளஸ். எனக்கென்னமோ இது ரன்பீர் கபூரை மனதில் வைத்தே எழுதப்பட்ட கதை என்று தோன்றியது.
ஏ.ஆர்.ரஹ்மான். இந்த பெயர் மட்டும்தான் இந்த படத்தை பார்ப்பதற்கு முக்கிய காரணம். என்ன ஒரு இசை! படத்தில் இசையின் முக்கியத்துவத்தை உணர்ந்து மோஹித் செளகான் ஒவ்வொரு பாடலையும் அசத்தலாக பாடியிருக்கிறார். அடுத்த வருடம் இந்த படம் இசை சம்பந்தப்பட்ட நிறைய விருதுகளை அள்ளப்போவது மட்டும் உறுதி.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!